
(Gold rates in India on July 2)
கடந்த ஓராண்டில், இந்திய கோல்டு இடிஎஃப்கள், தங்க விலைகளைச் சார்ந்து சுமார் 13 சதவீத நெகடிவ் ரிட்டன்களை வழங்கியுள்ளது. இந்த மோசமான ரிட்டன்களைப் பார்க்கும் போது, எவர் மனதிலும் கேள்வி: தற்போது கோல்டு இடிஎஃப்களை விற்கலாமா? என்பதே ஆகும்.
அதற்கு முன் சர்வதேச தங்க விலையின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்; ஏனெனில், இந்திய கோல்டு இடிஎஃப்கள் சர்வதேச விலைகளையே பெரும்பாலும் பின்பற்றுகின்றன.
தங்கத்தின் விலையில் சுமார் மூன்று ஆண்டுகளில் குறைந்த விலையை அடைந்துள்ளது, இவ்வளவு குறைந்த விலையில் இடிஎஃப்களை விற்பது புத்திசாலித்தனம் அல்ல. சொல்லப் போனால், வீழ்ச்சியின் போது வாங்குவதும், விலையேற்றத்தின் போது விற்பதுமே முதலீடுகளின் தாரக மந்திரமாகும். தங்கமும் இதற்கு விதிவிலக்கல்ல.
மேலும், உலகெங்கிலும் பெரும்பாலான நிதி நிறுவனங்கள் மற்றும் பிரதான முதலீட்டு வங்கிகள், தனியிட தங்க விலை இலக்கை ஒரு அவுன்ஸுக்கு சுமார் 1250-1400 டாலர்கள் என்று நிர்ணயத்துள்ளன. இது, ஒரு அவுன்ஸுக்கு 1185 டாலர்கள் என்ற தற்போதைய விலையைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும்.
இந்த பெருமதிப்பு கொண்ட உலோகம் மோசமான சமயங்களில் எல்லாம் கைகொடுக்கக் கூடியதாக இருந்துள்ளது. தற்சமயம் உலகளவில் நிறைய நன்மை தரும் விஷயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. யு.எஸ். மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வந்து கொண்டிருக்கும் பொருளாதார புள்ளி விவரங்கள் நம்பிக்கை தரக்கூடியனவாய் உள்ளன. தற்போது ஈக்விட்டிகள் தான் முதலீட்டுக்கான நேச்சுரல் அஸ்ஸெட் க்ளாஸாக உள்ளன, தங்கம் இல்லை.
அடுத்து வரும் ஆண்டில் தங்கத்தின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பது, ஃபெட் அதன் குவான்டிட்டேட்டிவ் ஈஸிங் ப்ரொக்ராமை பொறுத்தே அமையும். ஃபெட் அமைப்பு ஒவ்வொரு மாதமும் பல்வேறு சொத்துகளை வாங்கியதன் மூலம் லிக்விடிட்டியை புகுத்தி வந்துள்ளது; இதில் பெரும்பாலான தொகை தங்கத்தில் முடங்கியுள்ளது. இவ்வமைப்பு தன் தூண்டுதலை வாபஸ் பெறத் தீர்மானிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை சரிவைடையும்.
அதனால் கோல்டு இடிஎஃப்களும் அவ்வாறே சரிவை நோக்கிச் செல்லும். மற்றொரு புறம், கொரிய தீபகற்பம் அல்லது இரான்-இஸ்ரேல் விவகாரங்கள் தலை தூக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை எட்டாத உயரத்துக்கு மறுபடி செல்லக்கூடும்.
தற்சமயம், ஃபெட் என்ன செய்யக்கூடும் அல்லது உலகளவில் என்ன மாற்றங்கள் நிகழக்கூடும் என்பவற்றையெல்லாம் யூகிப்பது மிகவும் சிரமம்.
எவ்வாறாயினும், தொடர்ந்து முதலீடுகளை கையில் வைத்திருப்பதே அறிவுடைமையாகும். பயத்தில் அனைத்தையும் விற்று விட்டால், அது நஷ்டங்களுக்கும், மனவருத்தங்களுக்குமே வித்திடுவதாக இருக்கும்.
More From GoodReturns

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications