நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாட்டின் மறைமுக வரியமைப்பு திருத்திற்கான ஜிஎஸ்டி மசோதா ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் வரும் 2017, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
ஜிஎஸ்டி ஒற்றை வரி அமைப்பிற்கு வழி வகுக்கும், வர்த்தக சந்தையில் ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் தாமதங்கள் சரிசெய்யப்பட்டு, வரி நிலையானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜிஎஸ்டி சலுகைகளை நேரடியாக பெறுவது எப்படி என்பதேயே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்..?
யாரெல்லாம் பொருட்கள் விற்பனை செய்கிறீர்களோ, சேவை அளிக்கக்கூடிய வணிகம் செய்து வருகிறீர்களோ அவர்கள் எல்லாருக்கும் ஜிஎஸ்டி பதிவு எண் தேவைப்படும். முதலில் ஜிஎஸ்டி பதிவு எண்ணிற்குப் பதிவு செய்வது எப்படி?
விற்பனையாளர்/விநியோகஸ்தர்
ஏற்கனவே விற்பனையாளர்கள்/விநியோகஸ்தர்களாக உள்ளவர்கள் யாரெல்லாம் மதிப்புக்கூட்டு வரி, மத்திய கலால் மற்றும் பிற பல்வேறு மாநில வரிகளைச் செலுத்தி வருகிறீர்களோ அவர்கள் சரக்கு மற்றும் சேவை வரி அல்லது புதிய ஜிஎஸ்டி முறைக்குப் பதிவு செய்ய தேவை இல்லை.
புதிய விற்பனையாளர்கள்/விநியோகஸ்தர்கள்
புதிய விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் முதலில் ஜிஎஸ்டி வரிக்குப் பதிவு செய்வது அவசியம்.
இதற்கான விண்ணப்பம் இணையத்தில் விரைவில் கிடைக்கும்.
பான் எண் தேவை
ஜிஎஸ்டி எண்ணிற்குப் பதிவு செய்யும் போது பான் எண் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தனியார் துறை அல்லது பொது துறை நிறுவனம் ஏதுவாக இருந்தலும் நீங்கள் விற்பனையாளர் அல்லது சேவை வழங்குநராக இருந்தால் ஜிஎஸ்டி பதிவென் கட்டாயம்.
மாநில மற்றும் தேசிய ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி விண்ணப்பத்தில் மாநில மற்றும் தேசிய ஜிஎஸ்டி இரண்டிற்கும் சேர்த்துக் கூட்டு விண்ணப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டிஎன்(GSTIN)
பதிவு செய்த விநியோகஸ்தர்களுக்கு ஜிஎஸ்டிஎன் எனப்படும் தனிப்பட்ட எண் வழங்கப்படும். தற்போது நடைமுறையில் இருப்பது போன்ற பல எண்களை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை.
முக்கிய சிறப்பு
இதற்குப் பதிவு செய்யும் போது உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால், பதிவு செய்த மூன்று நாட்களில் பதிவென் கிடைத்துவிடும்.
தவறு நடப்பதாகக் கருதும் போது மட்டும் பதிவு செய்ததை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும். இது மிகவும் அரிதாக இருக்க வாய்ப்பு உள்ளது.
ஆவணங்கள்
பதிவு செய்யும் போது படிவத்தில் குறிப்பிட்டுள்ள பான் கார்டு நகல், வங்கி விவரங்கள், வணிக விவரங்கள் போன்ற எல்லா ஆவணங்களையும் சமர்ப்பித்தல் வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
புதிய பதிவிற்கு மாற்றுதல்
தற்போது யாரெலாம் வாட், சிஎஸ்டி போன்றவற்றுக்குப் பதிவு செய்து பயன்படுத்தி வருகிறீர்களோ அவர்கள் புதிய முறைக்கு மாற்றிக்கொள்ளலாம். அதைப் பற்றி முறையான அறிவிப்பு வரும் வரை தற்போது ஏதும் கூற இயலாது.
எதற்காக ஜிஎஸ்டி-இல் பதிவு செய்ய வேண்டும்?
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும்போது நாட்டின் வணிக வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017, ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருக்கும் என்பதால் உங்கள் வணிகத்தை நீங்கள் இதில் பதிவு செய்வது நல்லது.
இதை எவ்வளவு விரைவாகச் செய்கிறீர்களோ அவ்வளவு நல்லது.
துவக்கத்தில் வழிமுறைகள் குறைவாக இருக்கலாம்
துவக்கத்தில் பதிவு செய்வதில் சில வழிமுறைகள் குறைவாக இருக்கும் என்பதால் சோதனை முயற்சியின் போதே பதிவு செய்தல் நல்லது என்று கூறப்படுகிறது.
இன்னும் இதற்கான தொழில்நுட்பம் மற்றும் பிற பின்பல செயல்பாடுகள் நிறைய உள்ளது.
எனவே, எவ்வளவு விரைவில் பதிவு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகப் பதிவுசெய்து விடுங்கள்.