சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி கீழ் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றோரு மாநிலத்திற்குப் பொருட்களை எடுத்துச் செல்லும் போது மின்னணு முறையில் இ-வே பில் பெறுவது 2018 ஏரல் 1 முதல் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றோரு மாநிலத்திற்கு 50,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பொருட்களை எடுத்துச் செல்லும் போது ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 68-ன் கீழ் இ-வே பில் பெற வேண்டும்.
இ-வே பில்லை பெற வேண்டும் என்றால் ஜிஎஸ்டி எண் பயன்படுத்தி அனைத்து வணிகர்களும் ewaybillgst.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் எப்படி இ-வே பில் சேவைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
ஜிஎஸ்டி பதிவு செய்த டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் இ-வே பில்லுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்து வணிகம் செய்து வரும அனைவரும் ஜிஎஸ்டி எண்ணைப் பயன்படுத்தி இ-வே பில் இணையதளமான ewaybillgst.gov.in-ல் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அங்கு ‘இ-வே பில்லிக்குப் பதிவு செய்க' என்ற தெரிவை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
ஜிஎஸ்டி எண்
இ-வே பில்லுக்குப் பதிவு செய்யும் தெரிவை கிளிக் செய்த பிறகு ஜிஎஸ்டி எண் மற்றும் கேப்ட்ச்சா குறியீட்டை உள்ளிட்ட பிறகு விண்ணப்பம் தோன்றும். அதில் உங்கள் வணிகச் சார்ந்த தகவல்களை அனைத்தையும் உள்ளிட்ட வேண்டும்.
ஒரு முறை கடவுச் சொல்
விண்ணப்பத்தினைப் புர்த்திச் செய்த பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். அதனை உள்ளிட்ட பிறகு இ-வே பில் சேவைக்கான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் அளிக்கப்படும்.
இ-வே பில்
இ-வே பில் இணையதளத்திற்கான பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைந்து உங்களுக்கான பில் விவரங்களை அளித்து இ-வே பில் பெற முடியும்.
ஜிஎஸ்டி பதிவு செய்யாத டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் என்ன செய்வது?
ஜிஎஸ்டி பதிவு செய்யாத டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் ewaybillgst.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று 'Enrolment for Transporters' என்ற தெரிவை கிளிக் செய்து படிவத்தினைப் பூர்த்திச் செய்து சமர்ப்பித்து இ-வே பில் சேவைக்கான டிரான்ஸ்போர்ட் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கலாம். டிரான்ஸ்போர்ட் பயனர் ஐடியை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கலாம்.