இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் உணவு ஆதாரமாக இருக்கிறது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள். பல்வேறு குடும்பங்களும் ரேஷனில் கிடைக்கக்கூடிய அரிசி, கோதுமை ,பருப்பு உள்ளிட்டவற்றை வைத்து தான் தங்களின் உணவு தேவையே பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
ரேஷன் அட்டை வகைகளுக்கு ஏற்ப இலவசமாக அரிசி, கோதுமை உள்ளிட்டவையும் மானிய விலையில் பல்வேறு பொருட்களும் விநியோகம் செய்யப்படுகின்றன. இது கோடிக்கணக்கான மக்கள் தங்களின் அன்றாட பசியை போக்குவதற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ரேஷன் கடையில் தொடர்ச்சியாக இலவச அரிசி உள்ளிட்டவற்றைப் பெற வேண்டும் என்றால் ஈ- கேஒய்சி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இலவச அல்லது மானிய விலையில் தொடர்ந்து ரேஷன் பொருட்களை பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஈ கேஒய்சி செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . டைம்ஸ் புல் இணையதள பக்கத்தில் இது தொடர்பான செய்தி வெளியாகியிருக்கிறது. பொதுமக்கள் இந்த kyc-ஐ தங்கள் வீடுகளில் இருந்தபடியே முடித்துக் கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு மானிய விலையிலும் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சரியான பயனாளிகளுக்கு தான் இந்த பலன்கள் சென்று சேர்கின்றன என்பதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது கேஒய்சி சரிபார்ப்பு என்பது செய்யப்படுகிறது. அதாவது ரேஷன் அட்டையில் இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைக் கொண்டு சரி பார்ப்பது தான் இந்த கேஒய்சி நடைமுறை .
இந்த நிலையில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் அனைத்து ரேஷன் கார்டுகளிலும் ஈ - கேஒய்சி செய்தால் தான் அவர்களுக்கு வழக்கம் போல இந்த இலவச பொருட்களும் மானிய விலை பொருட்களும் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பொதுமக்கள் இதற்காக எங்கேயும் செல்ல வேண்டிய தேவையில்லை.
Mera eKYC App மற்றும் Aadhaar Face RD ஆகிய இரண்டு செயலிகள் வாயிலாக தங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த ஈ கேஒய்சி நடைமுறையை முடித்துக் கொள்ளலாம். முதலில் இதற்கு உங்கள் போனில் மேலே கூறிய 2 செயலிகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . Mera eKYC செயலியை நீங்கள் பதிவிறக்கம், செய்து ஓபன் செய்ய வேண்டும். அதில் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
இதன் பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் அதனை உள்ளிட்ட வேண்டும். ஓடிபி உள்ளிட்ட உங்களின் விவரங்கள் அதில் காட்டும் அவற்றை சரிபார்த்த பின்னர் ekyc என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து உங்களுடைய போனில் கேமரா ஓபன் ஆகும். அந்த கேமரா உங்களுடைய முகத்தை ஸ்கேன் செய்யும். உங்கள் போனில் ஏற்கனவே இருக்கும் Aadhaar Face RD செயலி முக அடையாள சரிபார்ப்பை தானாகவே செய்யும்.
இதனை அடுத்து நீங்கள் சப்மிட் கொடுத்து விட வேண்டும். உங்களுடைய ரேஷன் கார்டு ஈ கேஒய்சி முடிந்தது. இது சக்ஸஸ் ஆனதா இல்லையா என்பதை மீண்டும் ஒருமுறை லாகின் செய்து ஸ்டேடட்ஸ் என்பதை கிளிக் செய்தால் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications