சமீபகாலமாக பங்குச் சந்தைகளில் பல தரப்பினரும் ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக இளம் தலைமுறையினர், கல்லூரி மாணவர்கள், சில பள்ளி மாணவர்கள் கூட தற்போது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை முதலீடு என்பது இப்போது பலரது வீட்டில் குடும்ப ஹாப்பியாக மாறியுள்ளது, ஒன்றாக ஆலோசித்து முதலீடு செய்யும் பழக்கத்தை கொண்டு உள்ளது.
இந்த நிலையில் பங்குச் சந்தையில் சம்பாதிக்கும் பணத்துக்கு பல வகையில் வரி விதிக்கப்படுகிறது. பங்குச் சந்தை வருமானத்துக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு முதலீட்டாளரும் அறிந்து வைத்து கொள்வது அவசியம். பங்குகள் விற்பனை மற்றும் வாங்குதலின் வாயிலாக கிடைக்கும் வருமானம் வணிக வருமானம் அல்லது மூலதன ஆதாயத்தின் கீழ் வரும்.

பங்குகளை நாம் எவ்வளவு காலம் வைத்திருந்து அதனை விற்பனை செய்து வருமானம் ஈட்டுகிறோம் என்பதை பொறுத்து அது நீண்ட கால மூலதன ஆதாயமா அல்லது குறுகிய கால மூலதன ஆதாயமா என்று முடிவு செய்யப்படும்.
12 மாதங்களுக்கு மேல் பங்குகளை வைத்திருந்தால் அது நீண்ட கால மூலதன ஆதாயத்தின் கீழ் வரும். அதேசமயம் 12 மாதங்களுக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால் அது குறுகிய கால மூலதன ஆதாயமாக கருதப்படும்.
லைன் டெலிவரியில் பங்குகளை விற்கப்பட்டால் அது ஊகமற்றது மற்றும் சாதாரண வணிக வருமானம் அல்லது மூலதன ஆதாயமாக வரி விதிக்கப்படலாம். futures and options-ல் வர்த்தகம் செய்தாலும் அது ஊக வணிகம் அல்லாத வருமானமாக கருதப்படுகிறது என்று தெரிவித்தார்.
வணிக வருமானத்துக்கு வழக்கமான ஸ்லாப் விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது. குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கு பொதுவாக 15 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. மேலும் வணிக லாபத்திலிருந்து தற்செயலான செலவினங்களை குறைத்து வரி விதிக்கக்கூடிய லாபத்தை கணக்கிட அனுமதிக்கிறது.
அதேசமயம் பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் உள்ள நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ.) வாயிலான வருமானத்துக்கும் அதே விதிகள்தான். பங்கு ஒதுக்கீடு இறுதி செய்த பிறகு டீமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்பட்ட தேதியிலிருந்து ஹோல்டிங் காலம் கணக்கிடப்படும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications