டெல்லி: இப்போதெல்லாம் இணைய மோசடி எனப்படும் ஆன்லைன் மோசடிகளால் அதிகமான பணத்தை மக்கள் இழக்கின்றனர். ஆன்லைனில் அதிக பரிவர்த்தனைகளைச் செய்வதால், மோசடி செய்பவர்கள் புத்திசாலித்தனமாக, வங்கிக் கணக்குகளில் இருந்து திருடுவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். இந்த மோசடிகளுக்கு பலியாகாமல் இருக்க ஆன்லைனில் பணத்தை கையாளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஆன்லைன் மோசடிகளுக்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவர் பெரும் மோசடியில் சிக்கியுள்ளார். இவர் டெல்லி மருத்துவமனையில் பணிபுரியும் இளம் மருத்துவர். தனது கிரெடிட் கார்டின் கடன் வரம்பு அதிகரித்து வருவதாக அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததுள்ளது. இதற்காக அவர் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருந்தது. ஆனால் அவரது வரம்பை அதிகரிக்காமல், அவரது கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் எடுக்கப்பட்டது. அதனால், மருத்துவர் போலீசில் புகார் செய்தார்.

எனவே இத்தகைய சூழல்களில் வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடியில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவும், அவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கவும், ரிசர்வ் வங்கி (RBI) அமைத்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிக முக்கியம் ஆகும். ஃபோன் பேங்கிங், நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது ஆன்லைன் பேமெண்ட் சிக்கல்கள் போன்ற சிக்கல்கள் காரணமாக நீங்கள் மோசடிக்கு ஆளாகியிருந்தால், நீங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.
வேறொரு நபரால் பாதுகாப்பை மீறி உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டால், உங்கள் பணத்தை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. மோசடி குறித்து உங்கள் வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக 3 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். 4 முதல் 7 நாட்களுக்குள் நீங்கள் புகாரளித்தாலும், உங்கள் பணத்தை திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது.
டெல்லி காவல்துறையைச் சேர்ந்த சைபர் கிரைம் நிபுணர் கிஸ்லி சௌத்ரி, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்க வங்கிகள் அதிக நேரம் எடுக்கும் என்று கூறியுள்ளார். பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
Step 1: ஆன்லைன் மோசடி உங்களுக்கு நடந்திருந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று எழுத்துப்பூர்வ புகாரை பதிவு செய்வது நல்லது. எஃப்ஐஆர் பதிவு செய்ய முயற்சிக்கவும். உங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால், புகாரைப் பதிவு செய்வதை உறுதிசெய்யவும்.
Step 2: மோசடி நடந்த அதே நாளில் அல்லது அடுத்த நாள், காவல் நிலையத்திலிருந்து நீங்கள் பெற்ற ரசீதுடன் உங்கள் வங்கிக்குச் செல்லவும். வங்கியில் மோசடிக்கு என பிரத்யேகமாக இருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, போலீஸ் ரசீதுடன் வங்கியிடம் கொடுக்கவும்.
Step 3: மூன்றாவதாக காவல் நிலையத்திலிருந்து நீங்கள் பெற்ற ரசீது மற்றும் வங்கியில் நீங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பித்த விண்ணப்பத்தின் ஆவணங்களின் நகல்களையும் RBI இன் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும். RBI இன் மின்னஞ்சல் முகவரி [email protected]. மேலும், உங்கள் மின்னஞ்சலின் CC இல் உங்கள் வங்கியின் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க நினைவில் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் 3 நாட்களுக்குள் செய்ய வேண்டும்.
7 நாட்களுக்குப் பிறகு காவல்துறையிலோ அல்லது வங்கிகளிலோ மோசடியைப் புகாரளித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. பிட்காயின், ஆன்லைன் நாணயம், ஆன்லைன் கேம்கள் அல்லது பந்தயம் ஆகியவற்றில் இழந்த பணத்தை மீட்டெடுக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications