ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் உணவகங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைத்துவிட்டன. இதனால் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. கூடிய விரைவில் இலட்சக்கணக்கான உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதால் கைவசம் இருக்கக்கூடிய இருப்பைக் கொண்டு வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை தருவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன. இந்த சூழலில் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கக்கூடிய அனைத்து குடும்பத்தினருக்கும் மத்திய அரசு மிக முக்கியமான ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.

மத்திய பெட்ரோலிய மற்றும் எரிவாயு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி வாடிக்கையாளர்களும் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகரிப்பு முறையை முடிக்க வேண்டியது கட்டாயம் என தெரிவித்து இருக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டர் நுகர்வோர் அனைவரும் இ கேஒய்சி முடிப்பது கட்டாயம் என்றும் இது மிகவும் எளிமையான நடைமுறைதான் என்றும் தெரிவித்திருக்கிறது.
சில நிமிடங்களிலேயே உங்களுடைய வீட்டில் இருந்தபடியே இந்த கேஒய்சி நடைமுறையை முடித்து விடலாம் என மத்திய அரசு அதில் தெரிவித்து இருக்கிறது. இதற்கான லிங்கினையும், எப்படி ஆன்லைன் வாயிலாகவே முடிப்பது என்ற வழிகாட்டுதல்களையும் அதில் வெளியிட்டு இருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கக்கூடிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகியவற்றில் எந்த நிறுவனத்தில் நீங்கள் சிலிண்டர் வாங்குகிறீர்களோ அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதனை அடுத்து லாகின் செய்து உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண், கஸ்டமர் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின்னர் Aadhaar FaceRD செயலி மூலம் முக அடையாள சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். அவ்வளவு தான் சிலிண்டர் இணைப்புக்காக இ கேஒய்சி முடிந்துவிட்டது.
ஆன்லைனில் செய்ய முடியாதவர்கள், கேஸ் இணைப்பு வாங்கிய அலுவலகத்திற்கு கேஸ் இணைப்பு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றை கையில் கொண்டு சென்றும் கேஒய்சியை முடித்து கொள்ளலாம். ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. சிலிண்டர் பதிவு செய்தவர்களுக்கு டெலிவரி செய்யப்படாமல் உள்ளது. இந்த சூழலில் கேஒய்சி-ஐ காரணம் காட்டி சிலிண்டர் டெலிவரி தடைபட்டுவிடக் கூடாது. எனவே கேஒய்சி முடிக்காதவர்கள் முடித்து கொள்ளுங்கள்.
More From GoodReturns

முதல்ல ஹோட்டல்.. இப்போ ஆட்டோ..!! முடங்கும் மெட்ரோ நகரங்கள்.!! கொரோனா காலத்தை விட மோசம்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

அதிகரிக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு: கடைவீதிகளில் தேடி தேடி இந்த பொருளை வாங்கும் மக்கள்!!

இந்தியாவில் LPG தட்டுப்பாடு தீவிரம்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம்..!

சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னை, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்!! அப்போ வீட்டு உபயோக சிலிண்டர் நிலைமை?

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!

எல்பிஜி சிலிண்டர் சப்ளை கட்.. ஹோட்டல்களை மூட வேண்டிய நிலை.. மீண்டும் விறகு அடுப்புக்கு செல்ல வேண்டுமா..?!

எல்பிஜி பற்றாக்குறை.. பிணங்கள் எரியூட்டு தகன மேடைகள் மூடப்பட்டது.. நிலைமை மோசமாகிறதா..?!

சிலிண்டர் தட்டுப்பாடு: ESMA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்!!

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!



Click it and Unblock the Notifications

