2018இல் பெரும் பகுதி நாட்கள் பங்குச்சந்தையில் சரிவுடனே முடிவடைந்துள்ளது. இந்தச் சரிவில் பெரும் பங்கு வகிப்பது அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி உயர்வு குறித்த முடிவுகள், பொதுத்துறை வங்கிகளில் வெளியான மோசடிகள் ஆகியவையே.
இந்நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இழந்த பணத்தைத் திரும்பப் பெறும் வகையில் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஐபிஓ
கடந்த சில மாதங்களாக ஐபிஓ வெளியீடுகள் பெரிய அளவிலான வெற்றியை அடையவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், பங்குச்சந்தை தற்போது இருக்கும் மோசமான நிலையில் நாட்டின் 3 முன்னணி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இறங்குகிறது.
12,000 கோடி ரூபாய்
2018ஆம் ஆண்டின் முதல் 2 மாதத்தில் ஐபிஓ வாயிலாக 6 நிறுவனங்களின் மூலம் வெறும் 3,559 கோடி ரூபாய் மட்டுமே நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் மாதம் மட்டும் 3 நிறுவனங்களின் வாயிலாகச் சுமார் 12,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்டப்பட உள்ளது
3 நிறுவனங்கள்
மார்ச் மாதம் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் (HAL), பந்தன் பேங்க் லிமிடெட், ஐசிஐசிஐ செக்யூரிட்டி ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுகிறது.
பிப்ரவரி மாதம்
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பிப்ரவரி மாதம் மிகவும் மோசமானதாகவே உள்ளது. பிஎன்பி வங்கி மோசடிகளால் வங்கித்துறை பங்குகள் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் இப்பிரிவு முதலீட்டாளர்கள் பிப்ரவரி மாதம் அதிகளவிலான பணத்தை இழந்துள்ளனர்.