இப்போ பங்குகளை வாங்க ஆரம்பித்தால் சரியா இருக்கும்.. ஏப்ரலில் டிவிடெண்ட் அறிவிக்கும் நிறுவனங்கள்

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள எல்லா நிறுவனங்களும் டிவிடெண்ட் வழங்குவதில்லை. குறிப்பிட்ட பங்குகள் மட்டுமே பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்குகின்றன. இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒரு பிரிவினர் டிவிடெண்ட் வழங்கும் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வார்கள். டிவிடெண்டாக வாயிலாக ஒரு வருமானம் கிடைக்கும் என்பதை இதற்கு முக்கிய காரணமாகும். இன்ஃபோசிஸ், டிசிஎஸ்,நால்கோ, காஸ்ட்ரோல் உள்பட பல நிறுவனங்கள் தங்களது பங்குதாரர்களுக்கு வழக்கமாக டிவிடெண்ட் வழங்கி வருகின்றன. அந்த வகையில் டிசிஎஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஆகியவை 2025 ஏப்ரல் மாதத்தில் இடைக்கால டிவிடெண்ட் அல்லது இறுதி டிவிடெண்ட் தொகையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நேற்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், 2025 ஏப்ரல் 10ம் தேதியன்று நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட தனிப்பட்ட மற்றும் ஒட்டு மொத்த நிதி முடிவுகளை பரிசீலித்து அங்கீகரிக்கவும், 2024-25ம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகை ஏதேனும் இருந்தால் இயக்குனர்கள் குழு பரிந்துரை செய்யும் என்று தெரிவித்துள்ளது.

இப்போ பங்குகளை வாங்க ஆரம்பித்தால் சரியா இருக்கும்.. ஏப்ரலில் டிவிடெண்ட் அறிவிக்கும் நிறுவனங்கள்

நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான எச்சிஎல் டெக்னாலஜிஸ், கடந்த 24ம் தேதியன்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், , 2025 ஏப்ரல் 21 மற்றும் 22ம் தேதிகளில் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம், 2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்தத நிதியாண்டுக்கான நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை பரிசீலித்து அங்கீகரிக்கவும், 2025-26ம் நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகை செலுத்துதல் ஆகியவற்றை கருத்தில் கொள்வதற்காக நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஏப்ரல் 19ம் தேதியன்று நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம், 2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்தத காலாண்டு/நிதியாண்டுக்கான நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட தனிப்பட்ட மற்றும் ஒட்டு மொத்த நிதி முடிவுகளை பரிசீலித்து அங்கீகரிக்கவும், 2024-25ம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகை ஏதேனும் இருந்தால், அதற்கான பதிவு தேதியை நிர்ணயிப்பது உட்பட பரிந்துரை செய்யவும் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி கடந்த 21ம் தேதி பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், 2025 ஏப்ரல் 19ம் தேதியன்று நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம், 2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்தத காலாண்டுக்கான நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட (தனிப்பட்ட மற்றும் ஒட்டு மொத்த) நிதி முடிவுகளை பரிசீலித்து அங்கீகரிக்கவும், 2024-25ம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகை ஏதேனும் இருந்தால், அதனை பரிந்துரை செய்யவும் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் எதிர்வரும் ஏப்ரல் 17ம் தேதியன்று நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ள மும்பை பங்குச் சந்தை அமைப்பிடம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த கூட்டத்தில் 2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு இறுதி டிவிடெண்ட் ஏதேனும் இருந்தால் இயக்குனர்கள் குழு பரிசீலித்து பரிந்துரைக்கும் என்று இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+