ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம், தனிப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்ளின் தேவைகளுக்கு ஏற்றவாறு பலதுறை,நம்பகமான மற்றும் செலவு குறைந்த இணைப்பு தீர்வுகளை வழங்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.
1988ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு இத்துறைக்கு 35 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளது. ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் தொலைத்தொடர்பு மற்றும் தரவு நெட்வொர்க்கிங் தீர்வுகளில் செம்பு மற்றும் ஃபைபர் பிசிக்கல இணைப்பை வழங்குகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது மற்றும் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது.

ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.5.83 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 8.7 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.6.38 கோடியாக இருந்தது.
மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர வருவாய் 0.34 சதவீதம் குறைந்து ரூ.41.93 கோடியாக சரிவடைந்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.42.07 கோடியாக இருந்தது. 2024 டிசம்பர் காலாண்டில் ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கு வருமானம் ரூ.12.66ஆக குறைந்தது. இது 2023 டிசம்பர் காலாண்டில் ரூ.13.87ஆக இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளில் ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 361 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 144 சதவீதம் அதிகரித்துள்ளது.
இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை 5.69 சதவீதம் குறைந்து ரூ.1,340.30ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.617 கோடியாக இருந்தது. இந்நிறுவனம் அண்மையில் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.25 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்தது.
இது தொடர்பாக ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவன வெளியிட்ட அறிக்கையில், 2025 மார்ச் 25ம் தேதி நடைபெற்ற நிறவனத்தின இயக்குனர்கள் குழு கூட்டத்தில், 2024-25ம் நிதியாண்டுக்கு தலா ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்குகளுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.25 அறிவிக்கப்பட்டது.
டிவிடெண்ட் பெற உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதி ஏப்ரல் 2ம் தேதியாகும். மேற்கூறிய இடைக்கால டிவிடெண்ட் ஏப்ரல் 23ம் தேதியன்று அல்லது அதற்கு முன் செலுத்தப்படும் என்று தெரிவித்து இருந்தது. அதன்படி,ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவன பங்குகள் இன்று எக்ஸ் டிவிடெண்ட் வர்த்தகத்தில் நடைபெறுகிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications