ஆசிய சந்தை 9 மாத சரிவினை சந்தித்துள்ள நிலையில் அமெரிக்க மற்றும் மற்றும் இங்கிலாந்து சந்தைகள் உயர்ந்துள்ளன. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர் ஆகும்.
அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பும் 0.34 பைசா சரிந்து 69.85 ரூபாய் ஆக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 284.58 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டினை வெளியேற்றிய நிலையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் 611.01 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைப் புதன்கிழமை வாங்கி இருந்தனர்.
இன்றைய நிலவரம்
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 70.85 புள்ளிகள் என 0.20 சதவீதம் சரிந்து 35,574.55 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 20.15 புள்ளிகள் என 0.19 சதவீதம் சரிந்து 10,749.75 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையில் நுகர்வோர் சாதனங்கள், ரியாலிட்டி, ஐடி, டெக், ஹெல்த்கேர் மற்றும் மெட்டல் துறை பங்குகள் சரிந்து காணப்பட்டன. அதே நேரம் எப்எம்சிஜி, நிதி, ஆட்டோமொபைல் மற்றும் வங்கி துறைகளின் பங்குகள் லாபம் அளித்து இருந்தன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
யெஸ் வங்கி, ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, மஹிந்ரா & மஹிந்த்ரா பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
இன்போஸிஸ், வேதாந்தா, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் நட்டத்தினை அளித்து இருந்தன.