பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை இந்திய பங்கு சந்தை பிளாட்டாக முடிந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மற்றும் சீனா ரூபாய் மதிப்பு சரிவும் ஆசிய சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளனர். அமெரிக்கக் கார்ப்ரேட் வருவாய் அதிகரித்து வரும் நிலையில் ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தை பங்குகள் சரிந்துள்ளன.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 22.21 புள்ளிகள் என 0.06 சதவீதம் உயர்ந்து 36,351.223 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 23.35 புள்ளிகள் என 0.21 சதவீதம் உயர்ந்து 10,957.10 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் கேப்பிட்டல் கூட்ஸ், தொழிற்சாலைகள், ஹெல்த்கேர், உள்ளிட்ட துறைகள் நட்டம் அளித்த நிலையில் எனர்ஜி, எப்எம்சிஜி, எண்ணெய் மற்றும் எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள், உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் லாபமும் அளித்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
வேதாந்தா, யெஸ் வங்கி, ஐடிசி, பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் லாபம் அளித்தன.
நட்டம் அளித்த பங்குகள்
கோடாக் வாங்கி, ஹீரொ மோட்டொ கார்ப், டாடா ஸ்டீல், கோல் இந்தியா, எச்டிஎப்சி பங்குகள் நட்டம் அளித்தன.