பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வது என்பது ஒரு சயின்ஸ், ஒவ்வொரு விஷயமும் பல தொடர்புகள் கொண்டு இருக்கும். இதைச் சரியாக புரிந்துகொண்டு, குறித்த காலத்தில் சரியான நடவடிக்கை எடுத்தால் கட்டாயம் ஜாக்பாட் தான்.
இப்படி பங்குச்சந்தை முதலீட்டில் தினமும் ஜாக்பாட் அடித்தவர்கள் ஏராளம் அதேபோல் தினமும் பணத்தை இழப்பவர்களும் ஏராளம். எனவே, முடிந்தவரை நீண்ட காலத்திற்குப் பங்குகளை வைத்திருப்பது நல்லது.

நீண்ட கால முதலீட்டாளர்கள் பங்கு விலை உயர்வது மட்டுமல்ல, பட்டியலிடப்பட்ட நிறுவனம் அவ்வப்போது அறிவிக்கும் பல்வேறு சலுகைகளின் மூலமும் லாபம் ஈட்டுகிறார்கள். இப்படி என்ன சலுகை என்றுதானே கேட்குறீங்க.
போனஸ் பங்குகள் (bonus shares), பங்கு திரும்ப வாங்குதல் (buyback), பங்குப் பிரிப்பு (stock split), இடைக்கால ஈவுத்தொகை (interim dividend), சிறப்பு ஈவுத்தொகை (special dividend), இறுதி ஈவுத்தொகை (final dividend) போன்ற வடிவங்களில் பங்கு முதலீட்டாளர்கள் கூடுதல் லாபம் பெறுவார்கள்.
ஆரம்பத்தில் இந்த சலுகைகள் பெரிய லாபகரமாகத் தெரியாவிட்டாலும் , நீண்ட காலத்தில், இவை உங்கள் பணத்தைப் பல மடங்கு அதிகரிக்க உதவும். இதை ஒரு உதாரணத்தோடு பார்த்தால் உங்களுக்கு கட்டாயம் புரியும்.
உதாரணமாகப் பத்தியா கம்யூனிகேஷன்ஸ் & ரீடைல் (இந்தியா) என்னும் நிறுவனத்தின் பங்கு மதிப்பின் வரலாறு, ஒரு நல்ல புரிதலை உங்களுக்கு அளிக்கும். பத்தியா கம்யூனிகேஷன்ஸ் பங்கு 2018 பிப்ரவரியில் பங்கு ஒன்றுக்கு 150 ரூபாய் என்ற விலையில் BSE SME ஐபிஓ-வில் அறிமுகமாகி 153.95 ரூபாய் என்ற விலையில் பட்டியலிடப்பட்டது.
இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிட்ட பிறகு, பத்தியா கம்யூனிகேஷன் நிறுவனம் நிறுவனத்தின் கூடுதல் சலுகைகளை வழங்கியது. இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு 2018 இல் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளையும், 2022 இல் 1:10 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பு அதாவது Stock Split-ஐ அறிவித்தது.
எனவே, பத்தியா கம்யூனிகேஷன்ஸ் ஐபிஓ-வில் ஒருவர் முதலீடு செய்து பங்குகளை பெற்று இருந்தால் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளும், 1:10 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பும் தேர்ந்து பங்குதாரரிடம் பங்கு எண்ணிக்கை 20 மடங்கு அதிகரித்து இருக்கும்.
பத்தியா கம்யூனிகேஷன் ஐ.பி.ஓ விவரங்களின்படி, ஒரு லாட்-ல் 1000 பங்குகளைக் கொண்டிருந்தது. எனவே, ஐபிஓ முதலீட்டாளருக்கு முதல் 1000 பங்குகள் கிடைத்திருக்கும். அதன் பின்பு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் மூலம் 2000 பங்குகள் கிடைத்திருக்கும். இதைத் தொடர்ந்து 1:10 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பு மூலம் 2000 பங்குகள் 20000 பங்குகளாக மாறியிருக்கும்.
இதை தொடர்ந்து 2018 ஐபிஓ-வில் 1.50 லட்சம் ரூபாய் (1000 பங்குகள் x ₹150) முதலீடு செய்திருந்தால், அது இன்று 7.41 லட்சம் ரூபாயாக (20,000 பங்குகள் x ₹37.05) அதிகரித்து இருக்கும். பத்தியா கம்யூனிகேஷன்ஸ் பங்கின் தற்போதைய விலை 37.05 ரூபாய்
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications