பிரான்ஸை சேர்ந்த நிதி சேவை நிறுவனமான பி.என்.பி. பரிபாஸ் தனது இந்திய சில்லரை பங்கு தரகு நிறுவனமான Sharekhan-ஐ சுமார் ரூ.3,000 கோடிக்கு தென்கொரியாவின் மிரே அசெட் பைனான்சியல் குழுமத்துக்கு விற்பனை செய்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தாகி விட்டது என்றும், இது குறித்த விவரங்களை மிரே அசெட் குழுமம் தென்கொரிய பங்குச்சந்தையில் தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது.
பி.என்.பி. பரிபாஸ் தற்போது விற்பனை செய்துள்ள ஷேர்கான் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் பல முறை கை மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகப்படுத்திய தரகர்களில் ஒருவரான ஸ்ரீபால் மொராக்கியா, பங்கு தரகு நிறுவனமான ஷேர்கானை தொடங்கினார். இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளில் பல கை மாறியுள்ளது.
பி.என்.பி. பரிபாஸ் அந்த நிறுவனத்தை வாங்குவதற்கு முன், சிட்டி வென்ச்சர் கேபிடல் இன்டர்நேஷனல் உள்ளிட்ட தனியார் பங்கு நிறுவனங்களின் குழுவிடம் இருந்தது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிதி சேவை நிறுவனமான பி.என்.பி. பரிபாஸ், இந்தியாவின் தரகு மற்றும் நிதிச் சேவை சந்தையில் வலுவாக காலூன்றும் நோக்கில் நம் நாட்டின் முன்னணி பங்கு தரகு நிறுவனங்களில் ஒன்றான ஷேர்கானை கையகப்படுத்தியது.
2015ல் ஷேர்கானை கையகப்படுத்துவதாக பி.என்.பி. பரிபாஸ் அறிவித்தது. இருப்பினும் 2018ல் தான் இந்த கையகப்படுத்தும் நடடிவக்கை நிறைவடைந்தது. தனியார் பங்கு நிறுவன குழுவிடம் இருந்து ஷேர்கானை சுமார் ரூ.2,100 கோடிக்கு வாங்கியது.
தற்போது ஷேர்கான் நிறுவனம் 29 லட்சம் வாடிக்கையாளர்களையும், 4,000க்கும் மேற்பட்ட வணிக கூட்டாளர்களையும் கொண்டுள்ளது. கடந்த நவம்பர் 10ம் தேதி நிலவரப்படி, ஷேர்கான் நிறுவனத்தில் 4,800 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் முதலீட்டு சொத்து மதிப்பு ரூ.83,000 கோடியாக உள்ளது.
பி.என்.பி. பரிபாஸ் நிறுவனம் தனது முக்கிய வர்த்தகமான வங்கி வணிகத்தில் கவனம் செலுத்த விரும்புகிறது. அதனால் தற்போது ஷேர்கான் நிறுவனத்தை கொரிய நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறது.
முன்னதாக, மியூச்சுவல் பண்ட் மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட் வணிகங்களில் இருந்தும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பரிபாஸ் முதலீடடு வங்கி மற்றும் பிரான்சின் முன்னணி வங்கியான பி.என்.பி. ஆகியவற்றின் இணைப்பிற்கு பிறகு 2,000ம் ஆண்டில் பி.என்.பி. பரிபாஸ் குழுமம் உருவாக்கப்பட்டது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications