நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மேம்படும் வகையில் நீண்ட கால அடிப்படையில் ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கையில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2.30 மணிக்கு 125 புள்ளிகள் உயர்வில் இருந்து 50 புள்ளிகள் உயர்வுக்குக் குறைந்த நிலையில் ரிசர்வ் வங்கி அறிவிப்புக்குப் பின் சென்செக்ஸ் 236.57 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலை வர்த்தகத் துவக்கம் முதல் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 300 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 275.67 புள்ளிகள் உயர்ந்து 35,178.88 புள்ளிகளை அடைந்துள்ளது, அதேபோல் நிஃப்டி குறியீடு 91.50 புள்ளிகள் உயர்ந்து 10,684.65 புள்ளிகளை அடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து எஸ்பிஐ, கோல் இந்தியா, விப்ரோ, மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
சரிவடைந்த நிறுவனங்கள்
புதன்கிழமை வர்த்தகத்தில் எச்டிஎப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிவை சந்தித்தது.