இன்று காலை தொடக்கத்தில் சற்று சரிவில் தொடங்கிய சந்தை பின் ஏற்றத்தினைக் கண்டது. எனினும் அந்த ஏற்றம் முழுவதும் நிலைக்கவில்லை என்றே கூறலாம்.
இது வார இறுதி என்பதால் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்திருக்கலாம். இதன் காரணமாக சந்தை சரிவினைக் கண்டு பெரியளவில் மாற்றமின்றி முடிவடைந்துள்ளது.
குறிப்பாக சென்செக்ஸ் 12.78 புள்ளிகள் அதிகரித்து, 51,544.30 ஆகவும், இதே நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து, 15,163.30 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1400 பங்குகள் ஏற்றத்திலும், 1520 பங்குகள் சரிவிலும், 159 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா அதிகரித்து, 72.75 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இது அதிக ஏற்ற இறக்கத்திற்கு மத்தியில் சற்று ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச காரணிகள் பலவும், கொரோனா வைரஸ் தாக்கம், தடுப்பூசி பற்றிய அறிவிப்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக முதலீட்டாளர்கள் புராபிட் செய்யும் காரணத்தினாலும் சந்தை ஏற்ற இறக்கத்தினை கண்டு, முடிவில் சற்று சரிவில் முடிவடைந்துள்ளது.
அதோடு சர்வதேச முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் ஊக்கத்தொகை பற்றிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில், தங்களது முதலீடுகளை செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பெரும்பாலான சென்செக்ஸ் குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஐடிசி, கெயில், சன் பார்மா, ஒஎன்ஜிசி, கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி. எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஐடிசி, சன் பார்மா, ஒஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.