நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலையில் சரிவில் தொடங்கி, ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 514.56 புள்ளிகள் அதிகரித்து, 51,937.44 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்குச்சந்தை நிப்டி 147.15 புள்ளிகள் அதிகரித்து 15,582 ஆக முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் 1717 பங்குகள் ஏற்றத்திலும், 1449 பங்குகள் சரிவிலும், 187 பங்குகள் மாற்றம் இல்லாமலும் முடிவடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ள அதே நேரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்து 72.62 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இந்திய சந்தையில் பையிங்க் பிரஷர் அதிகமாக இருந்ததாலும், இன்று ஜிடிபி மதிப்பீடுகள் குறித்த வெளியீடுகள் வெளியாகவுள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பு சற்றே சரிவில் முடிவடைந்துள்ளன.
இன்டெக்ஸ்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள, நிஃப்டி ஐடி மற்றும் நிஃப்டி ஆட்டோ குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. மற்றவை அனைத்தும் சற்று ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக பி.எஸ்.இ மெட்டல்ஸ், பி.எஸ்.இ ஆயில் & கேஸ், பி.எஸ்.இ எஃப் எம் சி ஜி குறியீடுகள் பச்சை நிறத்தில் காணப்படுகின்றது.
நிஃப்டி குறியீடு
இதனையடுத்து நிஃப்டி குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எம்&எம், அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், லார்சன், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எம்&எம், இன்ஃபோசிஸ், லார்சன், இந்தஸிந்த் வங்கி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.