தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்று இந்திய சந்தைகள் பலத்த சரிவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் சரிவிலேயே முடிவடைந்தன. குறிப்பாக சென்செக்ஸ் 434.93 புள்ளிகள் குறைந்து, 50,889.76 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 137.20 புள்ளிகள் குறைந்து, 14,981.75 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் 1175 பங்குகள் ஏற்றத்திலும், 1727 பங்குகள் சரிவிலும், 170 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளன.
இதற்கிடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள குறியீடுகளும் சரிவில் முடிவடைந்துள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், இந்தஸிந்த் வங்கி, கெயில், ஹெச்யுஎல், டாக்டர் ரெட்டீஸ் லேபராட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் இந்தஸிந்த் வங்கி, ஹெச்யுஎல், டாக்டர் ரெட்டீஸ் லேபராட்டீஸ், என்டிபிசி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, எஸ்பிஐ,ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
பலவீனமான சர்வதேச காரணிகள், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளினால் சந்தையானது ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. எனினும் சர்வதேச அளவில் நிலவி வரும் பலவீனமாக காரணிகள், குறிப்பாக அமெரிக்காவின் வேலை குறித்தான டேட்டா சாதகமாக இல்லாத நிலையில், சந்தைகள் சரிவில் உள்ளன. அதோடு மீடியம் டெர்ம் முதலீட்டாளர்களும் கிடைத்த லாபத்தினை வார இறுதி வர்த்தக நாள் என்பதால் புராபிட் புக் செய்ததால் சந்தை சரிவில் முடிவடைந்துள்ளது.