வாராத்தின் இறுதி வர்த்தக நாளாக இன்றும் இந்திய சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிந்துள்ளது.
இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்தன. குறிப்பாக சென்செக்ஸ் 440.76 புள்ளிகள் குறைந்து, 50,405.32 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 142.65 புள்ளிகள் குறைந்து, 14,938.10 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, கெயில், மாருதி சுசூகி, கோடக் மகேந்திரா, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸிந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ், விப்ரோ, யுபிஎல், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் ஓஎன்ஜிசி, மாருதி சுசூகி, கோடக் மகேந்திரா, நெஸ்டில், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸிந்த் வங்கி, எஸ்பிஐ, பவர் கிரிட் கார்ப், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் , எண்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
பலவீனமான சர்வதேச காரணிகளால், அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளது. அதோடு அதிகரித்து வரும் பத்திர லாபத்தின் மத்தியில் பலத்த வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. ஏனெனில் ரிஸ்கியான முதலீடுகளை தவிர்த்து முதலீட்டாளர்கள் நல்ல லாபம் கொடுக்க கூடிய அரசாங்க பத்திரங்களை நாட தொடங்கியுள்ளனர்.
இதனால் ஆசிய பங்கு சந்தைகளும் இன்று காலை தொடக்கத்திலேயே சற்று சரிவில் காணப்பட்டது. இந்த நிலையில் இந்த சந்தையும் சரிவில் தொடங்கி சரிவிலேயே முடிவடைந்துள்ளது.