நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் தொடங்கி, சரிவிலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 740.19 புள்ளிகள் குறைந்து, 48,440 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது இதே தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 224.5 புள்ளிகள் குறைந்து, 14,324 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 784 பங்குகள் ஏற்றத்திலும், 2147 பங்குகள் சரிவிலும், 170 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 72.62 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது சந்தையில் செல்லிங் பிரஷர் அதிகம் இருந்த நிலையில் சரிவினைக் கண்டுள்ளது. இன்று காலையில் ரூபாயின் மதிப்பு 13 பைசா குறைந்து, 72.69 ரூபாயாக தொடங்கியது. இதே முந்தைய அமர்வில் 72.56 ரூபாயாக முடிவடைந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்டிஎஃப்சி, ஜே எஸ் டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசூகி, ஐஓசி, ஹெச்யுஎல், கோல் இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி,லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசூகி, ஹெச்யுஎல், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, எண்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு எதிராக உள்ள அதே சமயம், இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் ஷார்ட் கவரிங்க் அதிகமாக இருந்த நிலயில், மதியத்திற்கு மேல் சந்தை பலத்த சரிவினைக் காண தொடங்கியது.