Closing bell.. சென்செக்ஸ் 560 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 14,500க்கு அருகில் முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி, ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன.

 

குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 568.38 புள்ளிகள் அதிகரித்து, 49,008.50 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது இதே தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 182.40 புள்ளிகள் அதிகரித்து, 14,507.30 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1633 பங்குகள் ஏற்றத்திலும், 1283 பங்குகள் சரிவிலும், 167 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.

 
Closing bell.. சென்செக்ஸ் 560 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 14,500க்கு அருகில் முடிவு..!

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 11 பைசா அதிகரித்து, 72.51 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இன்று காலையில் ரூபாயின் மதிப்பு 10 பைசா அதிகரித்து, 72.52 ரூபாயாக தொடங்கியது. இதே முந்தைய அமர்வில் 72.62 ரூபாயாக முடிவடைந்தது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், டாடா பின்செர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே யுபிஎல், பவர் கிரிட் கார்ப், ஈச்சர் மோட்டார்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், ஹெச்யுஎல், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், இந்தஸிந்த் வங்கி, ஐடிசி, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு சாதகமாக உள்ள நிலையில், பொருளாதாரம் குறித்த அறிக்கைகள் என பலவும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளது. குறிப்பாக டாலரின் மதிப்பு, அதிகரித்து வரும் பத்திர லாபம் என சர்வதேச காரணிகள், சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

closing bell: Sensex gains 560 points above, nifty ends nearly 14,500

Market update.. Closing bell: Sensex gains 560 points above; nifty ends nearly 14,500
Story first published: Friday, March 26, 2021, 20:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X