நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி, முடிவிலும் ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 280.15 புள்ளிகள் அதிகரித்து, 50,051.44 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது இதே தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 78.35 புள்ளிகள் அதிகரித்து, 14,814.75 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு எதிராக இருந்தாலும், இந்திய சந்தைகள் இன்று, வலுவான வங்கி பங்குகள் ஏற்றத்திற்கு மத்தியில் சந்தைகள் சற்று ஏற்றத்தில் தொடங்கி, ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக வங்கி பங்குகள் ஏற்றம் கண்டது சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ எஃப் எம் சி ஜி, பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. மற்றவை பச்சை நிறத்தில் முடிவடைந்துள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டிவிஸ் லேப்ஸ், டைட்டன் நிறுவனம், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐஓசி, ஹிண்டால்கோ, ஒஎன்ஜிசி, பவர் கிரிட் கார்ப், கெயில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச் டி எஃப் சி வங்கி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஒஎன்ஜிசி, பவர் கிரிட் கார்ப், ஐடிசி, என்டிபிசி, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.