நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் தொடங்கி, முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 871.13 புள்ளிகள் குறைந்து, 49,180.31 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது இதே தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 265.35 புள்ளிகள் குறைந்து, 14,549 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 13 பைசா குறைந்து 72.56 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது சந்தையில் செல்லிங் பிரஷர் அதிகம் இருந்த நிலையில், சற்று சரிவினைக் கண்டுள்ளது. இன்று காலையில் ரூபாயின் மதிப்பு 72.53 ரூபாயாக தொடங்கியது. இதே முந்தைய அமர்வின் முடிவு விலையானது 72.43 ரூபாயாகும்.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எம்&எம் , எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு எதிராக உள்ள அதே சமயம், நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரியும் இருப்பதால் இந்திய சந்தைகள் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்றும் கவனமாக வர்த்தகம் செய்வது நல்லது.