நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் தொடக்கத்தில் சற்று சரிவில் தான் தொடங்கின. ஆனால் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்ட இந்திய சந்தைகள், முடிவில் எதிர்பாராத அளவு ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.
குறிப்பாக சென்செக்ஸ் 641.72 புள்ளிகள் அதிகரித்து, 49,858.24 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 186.15 புள்ளிகள் அதிகரித்து, 14,744 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதே 1461 பங்குகள் ஏற்றத்திலும், இதே 1461 பங்குகள் சரிவிலும், 200 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ் தவிர, மற்ற பெரும்பாலான குறியீடுகள் பச்சை நிறத்திலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள எண்டிபிசி, ஹெச்யுஎல், பவர் கிரிட் கார்ப், ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல்,யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே லார்சன், டெக் மகேந்திரா, கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் எண்டிபிசி, ஹெச்யுஎல், பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே லார்சன், டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, டைட்டன் நிறுவனம், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் இன்று காலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 72.51 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று தொடக்கத்தில் 72.58 ரூபாயாக முடிவடைந்துள்ளது.