நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று காலையில் ஏற்றத்தில் தொடங்கி, முடிவிலும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
சாதகமான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தையானது இன்று மீண்டும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து சந்தையானது சரிவினைக் கண்ட நிலையில், பங்குகள் குறைந்த நிலையில் வாங்க சரியான இடமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சந்தையில் வாங்குதல் அதிகரித்த நிலையில் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ஃப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சந்தை சற்றி ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலும் சென்செக்ஸ் 462.65 புள்ளிகள் அதிகரித்து, 59,652.38 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 132.90 புள்ளிகள் அதிகரித்து, 17,778.90 புள்ளிகளாகவும் தொடங்கியது.
இதனையடுத்து முடிவில் சென்செக்ஸ் 488.10 புள்ளிகள் அதிகரித்து, 59,677.83 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 144.30 புள்ளிகள் அதிகரித்து, 17,790 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து 2,096 பங்குகள் ஏற்றத்திலும், 1,023 பங்குகள் சரிவிலும், 119 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ தவிர, மற்ற அனைத்து குறியீடுகள் பச்சை நிறத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், கிட்டதட்ட 6% மேலாகவும், நிஃப்டி ஆட்டோ 4% மேலாகவும், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும் ஏற்றம் கண்டுள்ளது. மற்றவை 1% கீழாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், டைட்டன் நிறுவனம், எம்& எம், மருதி சுசூகி, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓ.என்.ஜி.சி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், கோல் இந்தியா, பிரிட்டானியா, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டைட்டன் நிறுவனம், எம்& எம், மருதி சுசூகி, இண்டஸ்இந்த் வங்கி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்.டி.எஃப்.சி, நெஸ்டில், பஜாஜ் பின்செர்வ். ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் நிலவரம்
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 19 பைசா குறைந்து, 74.78 ரூபாயாக முடிவடைந்துள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம், பத்திர சந்தை ஏற்றத்தினை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உள்ளிட்ட பல காரணிகள் ரூபாயின் மதிப்பானது சரிவினைக் காண வழிவகுத்துள்ளது.