வாரத்தின் முதல் நாளே இந்திய பங்கு சந்தை மிகப் பெரிய அளவில் சரிந்துள்ளது. அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போரில் மீண்டும் ஏற்பட்ட பதற்றம், ரூபாய் மதிப்புச் சரிவு போன்றவை இன்று பங்கு சந்தையில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன.
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 467.65 புள்ளிகள் என 1.22 சதவீதம் சரிந்து 37,922.17 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 151 புள்ளிகள் என 1.30 சதவீதம் சரிந்து 11,438.10 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ஐடி துறை பங்குகள் லாபம் அளித்த நிலையில் ஆட்டோமொபைல் எனர்ஜி, எப்எம்சிஜி, மெட்டல், எண்ணெஉ மற்றும் எரிவாயு, ரியாலிட்டி மற்றும் ஃபினான்ஸ் துறை பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, யெஸ் வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட வங்கிகள் லாபம் அளித்த நிலையில் சன் பார்மா, மஹிந்தரா & மஹிந்தரா, வேதாந்தா, இண்டஸ் இண்ட் வங்கி, எஸ்பிஐ, எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத விதமாக 72.67 ரூபாயாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.