மும்பை: அண்மையில் பிரபல முதலீட்டாளரான விஜய் கேடியா, பட்டேல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தில் தான் வைத்திருந்த பங்குகளை விற்பனை செய்தார். இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பேசுபொருளானது. இந்நிலையில் பட்டேல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவன பங்குகளை வாங்கலாம் என தரகு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மல்டி பேக்கர் நிறுவனமான பட்டேல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஓராண்டு காலத்தில் 290% லாபத்தை பெற்று தந்துள்ளது.

2024 மார்ச் கணக்கின்படி இந்த நிறுவனத்தின் பிரதான முதலீட்டாளரான விஜய் கேடியா, சுமார் பத்து லட்சம் பங்குகளை அதாவது நிறுவனத்தில் இருந்த தன்னுடைய பங்குகளில் 0.13 சதவீதத்தை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது டிசம்பர் நிறுவனத்தில் 1.68 சதவீத பங்குகளை வைத்திருந்த அவர் தற்போது 1.55 சதவீதமாக குறைத்துள்ளார்.
பட்டேல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் அணைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள், சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 4,500 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையின் சிஏஜிஆர் என்பது 79% ஆக இருக்கிறது. இந்த நிறுவனம் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இந்நிறுவனம் 2023ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் 4,322 கோடியாகவும், லாபம் 179 கோடி ரூபாயாகவும் உள்ளது. நிறுவன பங்குகளில் 52.72% சில்லறை முதலீட்டாளர்களிடம் உள்ளது. 39.41% புரமோட்டர்களிடமும், உள்நாட்டு நிறுவனங்கள் வசம் 4.41% மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் 3.37% உள்ளது.
நிறுவனத்தின் வருவாய் மற்றும் பங்கு மதிப்பு உயர்வு ஆகியவை சிறப்பாக இருக்கும் நிலையில் விஜய் கேடியா இந்த பங்குகளை விற்றது பேசு பொருளானது. இருப்பினும் பங்குச்சந்தை தரகு நிறுவனமான ஆனந்த் ரதி, பட்டேல் இன்ஜினியரிங் நிறுவன பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்துள்ளது. ரூ.58க்கு இந்நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகமாகின்றன. இது விரைவில் ரூ.66ஐ எட்டும் என கணிப்பு வெளியாகியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications