கடந்த மாதம் 22ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குததலில் சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது.
பஹல்காம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் இந்திய பங்குச் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை பங்குச் சந்தையில் கவனிக்கபடாமல் இருந்த டிரோன் மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்த பங்குகள் லைம் லைட்டுக்கு வந்தன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாதுகாப்பு பங்குகளின் விலை உயர்வுக்கு வழிவகுத்தன. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு ஐடியாஃபோர்ஜ், ஜென் டெக்னாலஜிஸ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிசிஎம் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை 8 முதல் 50 சதவீதம் வரை லாபத்தை ஈட்டின.

கடந்த மாதம் நடந்த தீவிராவாத தாக்குதலுக்கு முன்பு ஐடியாஃபோர்ஜ் டெக்னாலஜி பங்கு விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து 58.47 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்பங்கின் விலை 50.31 சதவீதம் உயர்ந்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு முன்பு பாரஸ் டிஃபென்ஸ் நிறுவன பங்கு விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து 29.57 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்பங்கின் விலை 16.59 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
ஏப்ரல் 22ம் தேதிக்கு முன்பு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்கு விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து 21.24 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்பங்கின் விலை 8.50 சதவீதம் உயர்ந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்கு விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து 16.99 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்பங்கின் விலை 17.30 சதவீதம் உயர்ந்துள்ளது.
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு முன்பு ஜென் டெக்னாலஜிஸ் பங்கு விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து 47.30 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்பங்கின் விலை 37.33 சதவீதம் உயர்ந்துள்ளது. டிஎஸ்பி மியூச்சுவல் .பண்டின் ஈக்விட்டிஸ் தலைவர் வினித் சாம்ப்ரே கூறுகையில், வலுவான ஆர்டர்புத்தக எதிர்பார்ப்பு மற்றும் புதிய ஆர்டர் அறிவிப்புகள் போன்றவற்றால் பாதுகாப்பு பங்குகளில் ஏற்றம் கண்டுள்ளது. நிச்சயமற்ற பொருளாதா சூழல் காரணாக நிறுவன விமர்சனங்கள் அமைதியாகவே உள்ளன. பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தல் சுழற்சிகள் பொதுவாக நீண்டதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைக்கும் இஸ்ரேல்.. பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications