2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சிறப்பான வெற்றியைப் பெறும் என்று எக்சிட் போல் கருத்துக் கணிப்புகளை கூறினாலும், பெரும்பாலான பங்குச்சந்தை ஆய்வாளர்கள் காத்திருந்து தேர்தல் முடிவுகளை தெரிந்துகொண்டு முதலீடு செய்வது உத்தமம் என கூறுகின்றனர்.
இந்தியப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை இன்று 4 சதவீதம் உயர்ந்து புதிய சாதனை உச்சத்தை எட்டின. திங்கட்கிழமை பங்குச்சந்தை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் எக்சிட் போல் முடிவுகள் தான், எக்சிட் போல் மூலம் இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் கொள்கையில் தொடர்ச்சி என முதலீட்டுச் சந்தைக்குத் தேவையான விஷயங்களை உறுதி செய்யும் வகையில் ஆளும் கட்சியான பிஜேபி ஆட்சிக்கு வரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஜூன் 4 ஆம் தேதி (நாளை) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள வேளையில், இதற்கு முன்பு தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பங்குச் சந்தை எப்படிச் செயல்பட்டு உள்ளது என்பதை தெரிந்துகொள்வது முதலீட்டாளர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
S&P BSE சென்செக்ஸ் குறியீடு கடந்த நான்கு தேர்தல் முடிவுகள் வெளியான நாளுக்கு முன்பு முடிவுகளைத் தொடர்ந்து ஆறு மாதங்கள் உயர்ந்துள்ளது, இக்காலகட்டத்தில் சராசரியாக 11 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பங்குச் சந்தையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் எப்போதும் கவலைப்படுவதுண்டு. கடந்த நான்கு தேர்தல் முடிவுகளின் நாளில் பங்குச் சந்தையில் நிலவிய சூழ்நிலையை இங்கே பார்ப்போம்.
மே 13, 2004
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் முறையே 0.77 சதவீதம் மற்றும் 0.37 சதவீதம் உயர்ந்து 5,399.47 மற்றும் 1,717.5 புள்ளிகளில் முடிந்தன.
சென்செக்ஸ் இன்டிராடே உயர்வு: 5,487.34 | சென்செக்ஸ் இன்டிராடே தாழ்வு: 5,131.03
நிஃப்டி இன்டிராடே உயர்வு: 1,750.30 | நிஃப்டி இன்டிராடே தாழ்வு: 1,625.10
மே 16, 2009 (16th May 2009)
சென்செக்ஸ் குறியீடு 2.53 சதவீதம் உயர்ந்தது. அதே நேரத்தில், நிஃப்டி குறியீடு 17.74 சதவீதம் உயர்ந்து முறையே 12,173.42 மற்றும் 4,323.15 புள்ளிகளில் முடிந்தன.
சென்செக்ஸ் இன்டிராடே உயர்வு: 14,284.21 | சென்செக்ஸ் இன்டிராடே தாழ்வு: 13,479.39
நிஃப்டி இன்டிராடே உயர்வு: 4384.30 | நிஃப்டி இன்டிராடே தாழ்வு: 3673.15
மே 16, 2014 (16th May 2014)
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் முறையே 0.90 சதவீதம் மற்றும் 1.12 சதவீதம் ஓரளவு உயர்ந்து முறையே 24,121.74 மற்றும் 7,203 புள்ளிகளில் முடிந்தன.
சென்செக்ஸ் இன்டிராடே உயர்வு: 25,375.63 | சென்செக்ஸ் இன்டிராடே தாழ்வு: 23,873.16
நிஃப்டி இன்டிராடே உயர்வு: 7,563.50 | நிஃப்டி இன்டிராடே தாழ்வு: 7,130.65
மே 23, 2019 (23rd May 2019)
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே கிட்டத்தட்ட நிலையாக இருந்தன, சென்செக்ஸ் 0.76 சதவீதமும் மற்றும் நிஃப்டி 0.69 சதவீதமும் சரிந்து முறையே 38,811.39 மற்றும் 11,657.05 புள்ளிகளில் முடிந்தன.
சென்செக்ஸ் இன்டிராடே உயர்வு: 40,124.96 | சென்செக்ஸ் இன்டிராடே தாழ்வு: 38,651.61
நிஃப்டி இன்டிராடே உயர்வு: 12,041.15 | நிஃப்டி இன்டிராடே தாழ்வு: 11,614.5
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!



Click it and Unblock the Notifications