தொடர்ந்து 5 மாதங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் சிறிய ஏற்றத்தை சந்தித்தன. குறிப்பாக கடந்த 4 வர்த்தக தினங்களில் ஸ்மால்கேப் இன்டெக்ஸ் 6.6 சதவீதம் உயர்ந்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. ஸ்மால்கேப் பங்குகளின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடி உயர்ந்தது. இந்த அதிரடி மாற்றம், விரக்தியின் விளிம்பில் இருந்த ஸ்மால்கேப் முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை தூண்டியுள்ளது.
அதேசமயம், பெரும்பாலான ஸ்மால்கேப் பங்குகளின் விலை அவற்றின் உச்சவிலையிலிருந்து குறைந்தபட்சம் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளன. அதாவது ஸ்மால்கேப் பங்குகள் இன்னும் கரடியின் பிடியில்தான் உள்ளன என்பதை இது உணர்த்துகிறது.

இதனால் தற்போதைய ஸ்மால்கேப் குறியீட்டின் எழுச்சி ஒரு நிலையான மீட்சியின் தொடக்கமா அல்லது கடுமையான சரிவு அதனை தொடர்ந்து சிறிய மீட்சியை குறிக்கும் W வடிவ சந்தையை நிலையை காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தரகு நிறுவனமான மோதலிலால் ஓஸ்வால் கூறுகையில், ஸ்மால்கேப் கரடி சந்தை இன்னும் மதிப்பீடுகளை போதுமான அளவு கவர்ச்சிகரமானதாக மாற்றவில்லை. நிப்டி 50 தற்போது அதன் நீண்ட கால சராசரியை விட 9 சதவீதம் குறைவாக வர்த்தகம் ஆகி வருகிறது. அதேநேரத்தில், ஸ்மால்கேப் இன்டெக்ஸ்கள் முறையே 22 சதவீதம் மற்றும் 25 சதவீதம் சராசரியை விட அதிகமாக உள்ளன என தெரிவித்தது.
ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ராஜேஷ் பால்வியா கூறுகையில், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் துறையில் இன்னும் கொஞ்சம் மீட்சியை காணலாம். ஆனால் நிப்டி 22,400க்கு மேல் நிலையாக வைத்திருக்கும் வரை ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தையில் ஏற்கனவே அதிகமாக விற்கப்பட்ட பங்குகளை வாங்க முயற்சிக்கலாம். வர்த்தக பக்கத்தில் சில வாய்ப்புகள் இருக்கும். ஆனால் நிப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஆகியவற்றுக்கான கட்டமைப்பு பலவீனமாக உள்ளது என்று தெரிவித்தார்.
சந்தை ஆலோசகர் சந்தீப் சபர்வால் கூறுகையில், கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட குறிப்பிடத்தக்க விற்பனை ஒட்டு மொத்த சந்தையை அதன் நியாயமான மதிப்பிற்கு கீழே கொண்டு வந்துள்ளது. மேலும் சில சிறிய மற்றும் நடுத்தர நிறுவன பிரிவுகளில் இன்னும் உபரிகள் இருந்தாலும், இந்த பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களும் நல்ல மதிப்பு மண்டலத்திற்குள் வந்துள்ளன. சந்தையின் அடுத்த கட்ட எழுச்சியின் முதல் கட்டத்தை பெரிய நிறுவனங்கள்தான் வழிநடத்த முடியும், பின்னர் நிலைப்படுத்தலாம். பின்னர் ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் நிறுவனங்களும் இதில் இணையலாம் என்று தெரிவித்தார்.
ஒட்டு மொத்த அளவில், ஸ்மால்கேப் பங்குகளின் மதிப்பீடுகள் இன்னும் அதிகமாகவும், சந்தை உணர்வு பலவீனமாகவும் இருப்பதால் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறந்த ரிஸ்க்-சரிசெய்யப்பட்ட வருமானத்திற்காக, அடிப்படை வலுவாக உள்ள லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தலாம், ஸ்மால்கேப் முதலீடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும் முதலீட்டாளர்கள் இருப்பது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Story written: subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications