மும்பை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவு பாதையில் இருக்கும் நிலையில் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகள் மட்டும் உயர்வை கண்டுள்ளன. வேகமாக விற்பனையாகும் நுகர் பொருள்கள் அதாவது FMCG நிறுவன பங்குகள் ஜூன் 4ஆம் தேதி பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான அன்று உயர்வை கண்டன.
குறிப்பாக Hindustan Unilever நிறுவனத்தின் பங்கின் மதிப்பு ஜூன் 4ஆம் தேதி பகல் 2.30 மணி அளவில் 5.62% உயர்ந்து 2,490 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதே போல Dabur India Ltd நிறுவன பங்கும் 5.20% உயர்ந்து ஒரு பங்கின் மதிப்பு 572.90 ரூபாய்க்கு வர்த்தகமானது.

Colgate-Palmolive Ltd நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4.39% உயர்ந்து 2,805 ரூபாய்க்கு வர்த்தகமானது. Britannia Industries நிறுவனத்தின் பங்கு மதிப்பும் 3.16% உயர்ந்து 5,331 ரூபாய்க்கு வர்த்தகமானது. மற்ற அனைத்து துறைகளும் 10% வரை சரிவை கண்ட நிலையில் , FMCG நிறுவன பங்குகள் சராசரியாக 5% வரை உயர்ந்தன.
பாஜக அருதி பெரும்பான்மை பெறவில்லை என்ற அதிருப்தி தான் சந்தையில் எதிரொலிக்கிறது என கூறும் Geojit Financial Services நிறுவனத்தின் தலைவர் விஜய்குமார், மோடி தலைமையில் அமையும் அரசு இந்த முறை சீர்த்திருத்தங்களில் கவனம் செலுத்தாமல் , மக்கள் நல திட்டங்களில் கவனம் செலுத்தலாம் என்ற கணிப்பும் FMCG நிறுவன பங்குகள் உயர காரணம் என கூறியுள்ளார்.
Bernstein என்ற வெளிநாட்டு தரகு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும் போது நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பங்குகள் உயர்வை காணும் என கூறியுள்ளது. அதற்கு ஏற்ப தற்போது FMCG நிறுவன பங்குகள் உயர்ந்துள்ளன.
மேக்ரோ எக்னாமிக் வளர்ந்து வருவது, கிராமப்புறங்கள் மற்றும் மக்கள் நல திட்டங்களில் அரசு கவனம் செலுத்தும், பருவமழை முறையாக இருக்கும் என்ற கணிப்பு, சில்லறை பணவீக்கம் குறைவு என்பன உள்ளிட்டவையே FMCG நிறுவன பங்குகளை உயர்த்தியுள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications