அமெரிக்காவின் வரி விதிப்புகளைக் கடுமையான முறையில் எதிர்கொண்டும் வருகிறது சீனா. இந்நாட்டு அதிபர் இன்று வெளியிட்ட கருத்துக்கள் மூலம் இரு நாடுகள் மத்தியில் இருந்த வர்த்தகப் போரை சரியான திட்டமிடல் உடன் தீர்த்துள்ளது.
இதனால் ஆசிய சந்தையில் சரிவுகள் ஏதுமில்லாமல் உயர்வான நிலையை அடைந்துள்ளது.
ஜி ஜின்பிங்
இன்று சீனாவின் ஹைய்நான் பகுதியில் நடந்த வளர்ச்சி குறித்த மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங்,, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வர்த்தகத்தை அனுமதிக்க அரசு முழுமையாகத் தயாராகி வருகிறது என ஜின்பிங், தெரிவித்தார்.
ஆட்டோமொபைல்
இதுமட்டும் அல்லாமல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியைக் குறைக்கவும், வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அரசு விதித்து வந்த கட்டுப்பாடுகளும் அதிகளவில் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் ஜின்பிங், தெரிவித்தார்.
மும்பை பங்குச்சந்தை
இதனால் இன்று காலை முதல் மும்பை பங்குச்சந்தையில் உயர்வான வர்த்தகச் சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் கணிசமான சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து உயர்வான நிலையிலேயே இருந்தது சென்செக்ஸ்
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 91.71 புள்ளிகள் உயர்ந்து 33,880.25 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 22.90 புள்ளிகள் உயர்ந்து 10,402.25 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.