நாட்டின் முன்னணி வீட்டுக்கடன் நிறுவனமான எச்டிஎப்சி 2016ஆம் நிதியாண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3வது காலாண்டு வர்த்தகத்தில் சுமார் 12.80 சதவீத லாப உயர்வை அடைந்துள்ளது.
இதன் மூலம் எச்டிஎப்சி நிறுவனத்தின் 3வது காலாண்டின் லாபம் 2,728.66 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 2,419 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவுகள் 12,253.9 கோடி ரூபாயில் இருந்து 2016-17 டிசம்பர் காலாண்டில் 14,981.41 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என எச்டிஎப்சி நிறுவனம் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் எச்டிஎப்சி நிறுவனத்தின் பங்கு மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் 0.25 சதவீதம் குறைந்து 1,367.50 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.