யார் கைவிட்டாலும் இந்த நிறுவன பங்குகள் உங்கள எப்பவுமே கைவிடாது..!

மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் சந்தையில் எந்த மாற்றம் இருந்தாலும் இவை முதலீட்டாளர்களுக்கு லாபத்தை பெற்று தரும்.

இப்படிப்பட்ட பங்குகளை முதலீட்டு நிபுணர்கள் புல்லட் ப்ரூப்(Bullet Proof) பங்குகள் என அழைக்கின்றனர். அந்த வகையில் இந்திய பங்குச்சந்தையில் புல்லட் ப்ரூப் பங்குகள் என அறியப்படுபவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (reliance industries)மற்றும் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்(pidilite industries) பங்குகள்.

யார் கைவிட்டாலும் இந்த நிறுவன பங்குகள் உங்கள எப்பவுமே கைவிடாது..!

கடந்த 10 ஆண்டு காலத்தில் அதாவது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 566% உயர்ந்துள்ளது. பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 476 % உயர்வு கண்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி ஒரு பங்கின் மதிப்பு 400.72 ரூபாய் என இருந்தது. அதுவே தற்போது 2915 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை சந்தை மூலதனம் என்பது 19.89 லட்சம் ரூபாயாக உள்ளது. நிறுவன பங்கின் ஃபேஸ் வேல்யூ 10 என்ற அளவிலும், புக் வேல்யூ 1172.80 என்ற அளவிலும் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 50 சதவீதம் புரமோட்டோர்கள் வசமே இருக்கிறது. 2023 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 8.89 லட்சம் கோடி ரூபாய் ஆகும். லாபம் 73,670 கோடி ரூபாய் ஆகும். கடந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த பங்கு 122 % லாபத்தை பெற்று தந்துள்ளது.

அடுத்ததாக பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை பொறுத்தவரைக்கும் ஒரு பங்கின் மதிப்பானது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 543 ரூபாய் என்ற அளவில் இருந்தது தற்போது 3,167 ரூபாய் என உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 154% லாபத்தை பெற்று தந்துள்ளது.

இந்த நிறுவன பங்கின் ஃபேஸ் வேல்யூ 1, புக் வேல்யூ 165.3. இந்தியாவின் புல்லட் ப்ரூப் பங்குகளாக அறியப்படக்கூடிய இந்நிறுவனத்தின் பங்கு, அரசு பல்வேறு திட்டங்களுக்கு செலவிடுவது மற்றும் கிராமப்புற பொருளாதாரம் மீண்டு வந்திருப்பது ஆகிய காரணங்களால் வளர்ச்சிகாணும் என ஷேர்கான் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கட்டுமான தொழில்களில் இந்நிறுவன தயாரிப்புகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் வலுவான பிராண்ட் வேல்யூ மற்றும் அவர்களின் சந்தைப்படுத்துதல் திறன் ஆகியவற்றின் காரணமாக இதன் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும் என்றும் ஷேர்கான் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்ற நிலைப்பாட்டில் வைத்திருப்பதாக ஷேர்கான் நிறுவனம் கூறியுள்ளது.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+