கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தினை தொட்டு வரும் இந்திய பங்கு சந்தைகள் இன்று, மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் தொடங்கியுள்ளது.
இன்று சந்தை ப்ரீ ஒபனிங்லேயே ஏற்றத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் தொடக்கத்திலேயே மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 363 புள்ளிகள் அதிகரித்து, 44,245.50 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 101 புள்ளிகள் அதிகரித்து 12,960 ஆகவும் தொடங்கியது. சரி இப்போது எப்படி உள்ளது? என்ன காரணம் தொடர்ன்ய்து இப்படி புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றதே. வாருங்கள் பார்க்கலாம்.
அதெல்லாம் சரி தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றதே என்ன காரணம்? தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்களினால் இன்று இந்திய சந்தைகள் கடந்த சில தினங்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது. அதுவும் வரலாறு காணாத உச்சத்தினை தொட்டு வருகின்றன.
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில், சில குறியீடுகள் தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி லைஃப், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், டெக் மகேந்திரா, ஹெச் சி எல் டெக், இன்ஃபோசிஸ், பஜாஜ் பைனான்ஸ்.டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 63 புள்ளிகள் அதிகரித்து, 44586 ஆகவும், இதே நிஃப்டி 25 புள்ளிகள் அதிகரித்து, 13,080 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றமில்லாமல் 74.39 ரூபாயாக காணப்படுகிறது.