நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன.
இது ரிசர்வ் வங்கியின் மத்திய கூட்டத்தில் 5வது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படுவதில்லை. ரிவர்ஸ் விகிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை.
அதோடு பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்புகளும் சற்று குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் பணவீக்கமும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 127.66 புள்ளிகள் அதிகரித்து, 52,360.09 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 52.30 புள்ளிகள் அதிகரித்து, 15,742.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 5.01 புள்ளிகள் அதிகரித்து, 52,237.44 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 0.90 புள்ளிகள் அதிகரித்து, 15,691 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1242 பங்குகள் ஏற்றத்திலும், 335 பங்குகள் சரிவிலும், 69 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஒ.என்.ஜி.சி, கோல் இந்தியா, ஐஓசி, பிபிசிஎல், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஒ.என்.ஜி.சி, லார்சன், ஹெச்.டி.எஃப்.சி, டெக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.யு.எல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும், இன்று தொடக்கத்தில் சற்று குறைந்து, 73.02 ரூபாயாக தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் முடிவு விலையானது 72.91 ரூபாயாக இருந்தது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 88.07 புள்ளிகள் சரிந்து, 452,144.36 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 17.75 புள்ளிகள் குறைந்து, 15,672.60 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.