நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளின் ஒன்று இண்டஸ்இந்த் வங்கி. அண்மையில் இந்த வங்கியில் சில முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. 2024-25ம் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் வட்டி வருமானமாக ரூ.674 கோடி தவறுதலாக பதிவு செய்யப்பட்டதாக வங்கி அண்மையில் தெரிவித்தது. கடந்த மார்ச் 10ம் தேதியன்று அதன்டேரிவேடிவ் போர்ட்ஃபோலியாவில் முறைகேடுகள் நடந்ததை ஒப்புக்கொண்டது.
சர்ச்சை
இது கடந்த டிசம்பர் 31 நிலவரப்படி, அதன் நிகர மதிப்பில் 2.35 சதவீதத்தை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளியான சில எதிர்மறையான தகவல்களால் அந்த வங்கி சர்ச்சையில் சிக்கியது. இந்த சூழ்நிலையில், இண்டஸ்இந்த் வங்கி தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கி எப்படியும் ரூ.304 கோடி நஷ்டத்தை சந்திக்கும் என்று நிபுணர்கள் மதிப்பீட்டு இருந்தனர்.

ஆனால், நினைத்தை காட்டிலும் இண்டஸ்இந்த் வங்கியின் மார்ச் காலாண்டு நிலை முடிவுகள் மிகவும் மோசமாக இருந்தது. இண்டஸ்இந்த் வங்கி 2025 மார்ச் காலாண்டில் ரூ.2,328.92 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. 2024 மார்ச் காலாண்டில் இந்த வங்கிக்கு ரூ.2,349 கோடி லாபம் கிடைத்து இருந்தது.
கணக்கியல் முரண்பாடுகள்
கடந்த வாரம் நடைபெற்ற வங்கியின் உள்தணிக்கைகளில், ரூ.674 கோடி மற்றும் ரூ.595 கோடி மதிப்புள்ள வட்டி வருமானத்தில் இரண்டு புதிய கணக்கியல் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை மார்ச் காலாண்டு முடிவுகளிலும் பிரதிபலிக்கின்றன. இண்டஸ்இந்த் வங்கி 19 ஆண்டுகளில் (2006 மார்ச் முதல்) முதல் முறையாக 2025 மாா்ச் காலண்டில்தான் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.3,048.3 கோடியாக உள்ளது. ஒதுக்கீடு ரூ.2,522.08 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் ரூ.1,743.63 கோடியாக இருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் இந்த வங்கியின் மொத்த வாராக் கடன் 3.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 1.92 சதவீதமாக இருந்தது.
சில ஊழியர்கள்
இண்டஸ்இந்த் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், வங்கிக்கு எதிராக மோசடி நடந்திருக்கலாம், வங்கியின் கணக்கியல் மற்றும் நிதி அறிக்கையிடலில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்ட சில ஊழியர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம். இது வங்கியின் நிதி நிலை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வங்கியின் இயக்குனர்கள் குழு சந்தேகிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.39 சதவீதம் குறைந்து ரூ.771.10ல் முடிவுற்றது. வங்கியின் மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் மோசமாக அமைந்துள்ளதால், அதன் தாக்கம் இன்றைய பங்கு வர்த்தகத்தில் இண்டஸ்இந்த் பங்கின் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமு் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் களைகட்டும் ஐபிஓ சந்தை.. செபியிடம் மலை போல் குவியும் ஐபிஓ ஆவணங்கள்..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications