நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்று இண்டஸ்இந்த் வங்கி. இந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருபவர் சுமந்த் கத்பாலியா. கடந்த 5 ஆண்டுகளாக சுமந்த் கத்பாலியா தலைமையில் இண்டஸ்இந்த் வங்கி சிறப்பான வளர்ச்சியை கண்டு வந்தது. குறிப்பாக இண்டஸ்இந்த் பங்குகளின் வலுவான மீட்சி ஏற்பட்டது. சமீபத்திய சரிவுகளுக்கு முன்பு, இந்நிறுவன பங்கின் விலை ரூ.398லிருந்து ரூ.936ஆக இரு மடங்குக்கு மேல் உயர்ந்தது. இண்டஸ்இந்த் வங்கியின் இயக்குனர்கள் குழு, சுமந்த் கத்பாலியாவின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீடிக்க அனுமதி வேண்டி இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் செய்தது.
ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கியின் இயக்குனர்கள் குழு பரிந்துரைத்த 3 ஆண்டு காலத்துக்கு பதிலாக ஒரு வருட நீடிப்புக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கியது. இரண்டாவது முறையாக, சுமந்த் கத்பாலியாவின் பதவி நீட்டிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான பதவி காலத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, இண்டஸ்இந்த் வங்கி தொடர்பான மூலோபாய தன்மை மற்றும் சாத்தியமான மேலாண்மை மாற்றம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இது இது இண்டஸ்இந்த் வங்கி முதலீட்டாளர்களின் உணர்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலையில் எதிரொலித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலை 5 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டு ரூ.886.40ஆக குறைந்தது. ஏற்கனவே இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலை சமீபகாலமாக தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இப்பங்கின் விலை 42.5 சதவீதம் சரிவு கண்டது. கடந்த 3 மாதங்களில் இப்பங்கின் விலை 8.41 சதவீதம் குறைந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 9.11 சதவீதம் குறைத்துள்ளது.
தரகு நிறுவனமான எம்கே குளோபல், இண்டஸ்இந்த் வங்கியின் இலக்கு விலையை ரூ.1,125ஆக குறைத்தது. இது எம்கே குளோபல் முதலில் மதிப்பீடு செய்து இருந்த இலக்கு விலையை (ரூ.1,400) காட்டிலும் 20 சதவீதம் குறைவாகும். இது ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை, இண்டஸ்இந்த் வங்கியின் நிர்வாக மாற்றத்திற்கும், மூலோபாய நிச்சயமற்ற தன்மைக்கும் வழிவகுக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதேசமயம் தரகு நிறுவனம், இண்டஸ்இந்த் வங்கி குறித்த வாங்கலாம் என்ற மதிப்பீட்டை தொடர்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறைவடைந்தபோது இப்பங்கின் விலை ரூ.936.80ஆக இருந்தது.
Story written by: Subramanian
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications