Closing Bell:9,000 கோடி ரூபாய் இழந்த டி.ஹெச்.எஃப்.எல் முதலீட்டாளர்கள். சரிவின் ஆழம் தெரியுமா?

சரியும் சந்தை சென்டிமென்ட் என்ன என்று தெரியுமா? மேலும் என்ன என்ன காரணங்களால் சந்தை சரிய இருக்கிறது என்று பாருங்களேன்.

திவான் ஹவுசிங் பிரச்னை

திவான் ஹவுசிங் பிரச்னை

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் திவால் ஆகிவிட்டதாகச் சொல்லப்பட்ட பிரச்னை மற்றும் ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனத்தின் கடன் பிரச்னைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபி கவனித்துக் கொண்டிருப்பதாகவும், தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் சில தினங்களுக்கு முன் சொன்னார்கள். இருப்பினும் அதற்கான பலன் சந்தையில் எதிரொலித்தது போல் தெரியவில்லை. ஐ.எல் & எஃப்.எஸ் பிரச்னையை கூட ஆப்ஷனில் விடலாம். ஆனால் திவான் ஹவுசிங் பிரச்னையை அப்படி விட முடியவில்லை. காரணம் அந்த நிறுவனத்தின் நிலையான தன்மையையே இந்த விலை இறக்கம் கேள்வி கேட்டிருக்கிறது.

9000 கோடி ரூபாய் இழப்பு

9000 கோடி ரூபாய் இழப்பு

சுமார் 610 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்குகள் திடீரென 260 ரூபாய்க்கு ஏன் இறங்க வேண்டும். அப்படியே இறங்கினாலும் திவாலாகாத நிறுவனம் என்று அவர்கள் தம்பட்டம் அடித்த பின்னும் உடனடியாக மீண்டும் அதிகரித்திருக்க வேண்டுமே... ஏன் அதிகரிக்கவில்லை. சுமார் 9000 கோடி ரூபாயை ஏன் அந்த பங்கில் முதலீடு செய்திருந்தவர்கள் இழக்க வேண்டும்.

இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

நிஃப்டி காலை 10,967 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி எப்படியோ ஏற்றம் கண்டு 11,067 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. அதே போல் சென்செக்ஸ் காலை 36,305 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி நிலையான ஏற்றம் கண்டு 36,652க்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு சந்தை தன்னுடைய 100 நாள் மூவிங் ஆவரேஜுக்கு கீழ் வர்த்தகமாவதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

எல்லாம் பயத்தில் எல்லோரும் பயத்தில்

எல்லாம் பயத்தில் எல்லோரும் பயத்தில்

சந்தை மட்டுமல்லாமல் பாண்டுகள், கரன்ஸி வர்த்தகம் ஈக்விட்டி பங்குகள் மற்றும் கமாடிட்டி சந்தைகள் என்று அனைத்திலும் முதலீட்டாளர்கள் ஒரு விதமான பயத்திலேயே வர்த்தகம் செய்து வருகிறார்கள். பலர் செய்த முதலீடுகளை வந்த விலைக்கு விற்று வெளியேறுவதும் இந்த இறக்கத்துக்கு ஒரு முக்கிய காரணம்.

ஆர்பிஐ

ஆர்பிஐ

இந்தப் பிரச்னைகளை சரிகட்ட மத்திய ரிசர்வ் வங்கி 10,000 கோடி ரூபாய்க்கு பாண்டுகளை வாங்க இருக்கிறது. இதனால் சந்தையில் தற்காலிகமாக கொஞ்சம் பணம் புழங்கும். இதற்குப் பிறகும் வயிற்றில் நெருப்பைப் கட்டிக் கொண்டு இருக்கும் படியாக மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் கூட்டம் வேறு அக்டோபர் 05, 2018ல் நடைபெற உள்ளது.

ஃபெடரல் பேங்க் ஆஃப் அமெரிக்கா

ஃபெடரல் பேங்க் ஆஃப் அமெரிக்கா

ஆர்பிஐ பிரச்னை நமக்கு சாதகமாக அமைந்தாலும், அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் வட்டி விகித கூட்டம் நம் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கக் காத்திருக்கிறது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

மேலே சொன்ன தற்காலிக வில்லன்கள் போக, நிரந்தர வில்லன்களான கச்சா எண்ணெய் விலை உயர்வு எப்போதும் இல்லாமல் இப்போது ராஜ நடை போடுகிறது. இப்போது கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 80 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. இது நிச்சயம் 100 டாலரைத் தொட்டு விடும் . ஏன் என்றால் ஒபெக் (OPEC) நாடுகள், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை சரி செய்வதற்காக தங்கள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

 வர்த்தகப் போர்

வர்த்தகப் போர்

கச்சா எண்ணெய் போக நிரந்தர வில்லனாக அமெரிக்க சீன வர்த்தகப் போரும் உருவெடுத்து வருகிறது. இந்தப் போரினால் அமெரிக்கா மற்றும் சீனவுக்கிடையே பல வர்த்தகங்கள் தேங்கி நிற்கின்றன. இந்த வர்ததகங்களினால் சென்று சேர வேண்டிய பணமும் தேங்கி நிற்கிறது.

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல்

இப்படி மக்கள் பிரச்னைகளை விடுங்கள், மக்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும். அவர்களுடைய (அரசியல்வாதிகள்) முக்கியமான பிரச்னை, சந்தையை நேரடியாக பாதிக்கும் பிரச்னை ஒன்று இருக்கிறது. அது 2019 மக்களவைத் தேர்தல். ஆக அடுத்த மக்களவைத் தேர்தல் நடந்து முடியும் வரை சந்தையை எத்தனை பேர், எப்படி எல்லாம் புரட்டி எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+