அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க பொருட்களுக்கு அதிகம் வரி விதிக்கும் நாடுகளுக்கு அதேபோல் பரஸ்பர விதிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். இந்த பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி நடைமுறைக்கு வர உள்ளது. இந்த வரி விதிப்பு அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் உபரியை கொண்டுள்ள நாடுகளை குறிவைப்பதாக இருக்கிறது.
டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை சர்வதேச வர்ததக போரை உருவாக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பால் வரி ராஜா என்று முத்திரை குத்தப்பட்ட இந்தியா, பரஸ்பர வரி விவகாரத்தில் நேரடியாக பிரச்சினையில் சிக்கியுள்ளது. இந்த வரி விதிப்பால், நம் நாடு ஏற்றுமதியில் 3,100 டாலர் வரை இழப்புகளை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

டிரம்பின் வரி விதிப்பால் அதிகம் பாதிக்கப்படகூடிய துறைகளில் ஒன்று மருந்து. அமெரிக்கா தற்போது மருந்து இறக்குமதிகளுக்கு குறைந்தபட்ச வரிகளை விதிக்கிறது. அதேசமயம் நம் அமெரிக்க மருந்துகளுக்கு 10 சதவீதம் வரி விதிக்கிறது. இதனால் இந்திய மருந்து பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையின் எல்லைக்குள் வைக்கிறது. இது இந்திய மருந்து உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். பல இந்திய மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் 5 முதல் 20 சதவீதம் வரையிலான குறைந்த லாப வரம்பில் செயல்படுகின்றன. அதிக வரிகளின் கீழ் லாபம் சாத்தியமானதாக இருக்க, அவர்கள்
தங்கள் தயாரிப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த வாரம் சன்பார்மா,சிப்லா, லுப்பின், டாக்டர் ரெட்டீஸ் மற்றும் டிவிஸ் லேப்ஸ் ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும்.
அடுத்ததாக நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை அதிகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலபார் கோல்ட், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்,ரென்சேன்ஸ் ஜூவல்லரி மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட பல இந்திய நகை நிறுவனங்கள் அமெரிக்க சந்தையில் வளர்ந்து வரும் இருப்பை கொண்டுள்ளன. இந்த வாரம் இந்த நிறுவன பங்குகள் மீது முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவின் ஐடி சேவைகள் துறை பெரும்பாலும் நேரடி வரி விதிப்பு விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு விதத்தில் இத்துறைக்கு வில்லங்கம் வர வாய்ப்புள்ளது. வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து அமெரிக்காவில் வாடிக்கையாளர் செலவினம் இறுக்கமடைந்தால், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்ற இந்திய ஐடி நிறுவனங்கள் நிதி விஷயத்தில் இழுபறியான நிலையை உணர வாய்ப்புள்ளது.
அதேசமயம், அமெரிக்காவுடான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் மீதான வரிகளின் தாக்கத்தை குறைக்கக்கூடும் என்று நொமுராவின் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், மற்ற நாடுகளை காட்டிலும் டிரம்ப் நிர்வாகத்திடம் அதிக இணக்கமான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது. பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் பலனளிக்க சிறிது காலம் எடுக்கும் என்றாலும், அது ஒரு ஊக்கமளிக்கும் அறிகுறியாக நாங்கள் கருதுகிறோம். பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் மீதான அத்தகைய வரிகளின் தாக்கத்தை குறைக்கக்கூடும் என்பதை குறிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications