இந்திய பங்குச் சந்தை சமீபத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருவது அனைவருக்கும் தெரியும், இந்த மோசமான வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான காரணம் மந்தமான உள்நாட்டு பொருளாதாரம், மோசமான நிறுவன லாபங்கள், ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, அமெரிக்கா-சீனா வர்த்தக போர் அச்சுறுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் கணிசமான வெளியேற்றம் போன்றவை தான்.
எனினும், ஒரு சுவாரஸ்யமான விஷயம் பங்குச்சந்தையில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் தற்போது 2 முக்கியமான விஷயத்தை பற்றி பேசி வருகின்றனர், இதில் ஒன்று பொங்கல் பண்டிகை, மற்றொன்று கும்பமேளா. இந்த நிலையில் கும்பமேளா மற்றும் பங்குச் சந்தை-க்கு மத்தியில் புரியாத ஒரு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

சாம்கோ செக்யூரிட்டீஸ் நடத்திய ஆய்வில் கும்பமேளா மற்றும் பங்குச் சந்தை-க்கு மத்தியில் இருக்கும் வியப்பளிக்கும் தொடர்பை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கடந்த ஆறு கும்பமேளா காலங்களில் பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்திருப்பது தெரிய வந்துள்ளது.
கும்பமேளா நடக்கும் காலகட்டங்களில் சென்செக்ஸ் குறியீட்டு சராசரியாக 3.42% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 52 நாட்கள் நீடக்கும் இந்த கும்பமேளா காலத்தில் பங்குச் சந்தைக்கு மிகவும் மோசமான வர்த்தக காலமாகவே உள்ளதை பங்குச்சந்தையின் வரலாற்று தரவுகள் காட்டுகிறது.
கடந்த ஆறு கும்பமேளா நடந்த காலத்தில் 6 முறையும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஐந்து முறை மட்டும் கும்பமேளாவுக்குப் பின்வரும் ஆறு மாதங்களில் பங்குச் சந்தை வலுவான வளர்ச்சியை பதிவு செய்து சராசரியாக 8% லாபத்தை ஈட்டியுள்ளது. சாம்கோ செக்யூரிட்டீஸ், கும்பமேளா காலம் பங்குச் சந்தை திருத்தத்தின் காலமாக செயல்படலாம் என்று கூறுகிறது.
உஜ்ஜைன் கும்பமேளா (2004) 29 நாட்கள் நடைபெற்றது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 5838.02 ஆக இருந்தது, முடிவில் 5647.15 ஆக குறைந்தது (-3.27%). ஆறு மாதங்களுக்குப் பிறகு, சென்செக்ஸ் 5704.1 ஆக உயர்ந்தது (+1.01%).
ஹரித்வார் கும்பமேளா (2010) 104 நாட்கள் நடைபெற்றது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 17584.87 ஆக இருந்தது, முடிவில் 17380.08 ஆக குறைந்தது (-1.16%). ஆறு மாதங்களுக்குப் பிறகு, சென்செக்ஸ் 20303.12 ஆக உயர்ந்தது (+16.82%).
பிரயாக்ராஜ் கும்பமேளா (2013) 56 நாட்கள் நடைபெற்றது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 19906.41 ஆக இருந்தது, முடிவில் 19646.21 ஆக குறைந்தது (-1.31%). ஆறு மாதங்களுக்குப் பிறகு, சென்செக்ஸ் 19997.09 ஆக உயர்ந்தது (+1.79%).
நாசிக்கில் கும்பமேளா (2015) 76 நாட்கள் நடைபெற்றது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 27932.9 ஆக இருந்தது, முடிவில் 25616.84 ஆக குறைந்தது (-8.29%). ஆறு மாதங்களுக்குப் பிறகு, சென்செக்ஸ் 24966.4 ஆக குறைந்தது (-2.54%).
உஜ்ஜைன் கும்பமேளா (2016) 31 நாட்கள் நடைபெற்றது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 25838.14 ஆக இருந்தது, முடிவில் 25230.36 ஆக குறைந்தது (-2.35%). ஆறு மாதங்களுக்குப் பிறகு, சென்செக்ஸ் 25765.14 ஆக உயர்ந்தது (+2.12%).
ஹரித்வார் கும்பமேளா (2021) 18 நாட்கள் நடைபெற்றது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 50029.83 ஆக இருந்தது, முடிவில் 47949.42 ஆக குறைந்தது (-4.16%). ஆறு மாதங்களுக்குப் பிறகு, சென்செக்ஸ் 61765.59 ஆக உயர்ந்தது (+28.81%).
கும்பமேளா விழாவிற்கு இந்தியா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்களை புனித நதியில் நீராடும் வழக்கம் உள்ளது. கும்பமேளா மற்றும் பங்குச் சந்தை இயக்கத்திற்கு இடையே உள்ள தொடர்பு வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றினாலும், சாம்கோ செக்யூரிட்டீஸ் பகுப்பாய்வு சந்தை வியப்பு அளிக்கிறது.
இன்றைய வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் குறியீடு 1048.90 புள்ளிகள் சரிந்து 76,330.01 எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 345.55 புள்ளிகள் சரிந்து 23,085.95 புள்ளிகளை எட்டியுள்ளது.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications