2025இல் சிறந்த லாபத்தை கொடுத்த பங்குகள் பட்டியலில் என்பிஎஃப்சி நிறுவனமான எல் அண்ட் டி ஃபைனான்ஸ் உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் தடுமாற்றம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. இந்த குழப்பத்திற்கு மத்தியில் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு எல் அண்ட் டி ஃபைனான்ஸ் பங்குகள் இதுவரை 121 சதவீதம் உயர்ந்து இதன் பங்கு விலை ரூ.300 ஆக உள்ளது. கடந்த 11 மாதங்களில் 10 மாதங்கள் உயர்வுடன் முடிந்த சாதனையை எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. நிஃப்டி குறியீட்டில் இந்த ஆண்டு அதிகம் வளர்ச்சி அடைந்த பங்காக எல் அண்ட் டி ஃபைனான்ஸ் திகழ்கிறது.

இதேவேளையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பங்குகள் சுமார் 230 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. 2012க்குப் பிறகு எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கும், இதன் முதலீட்டாளர்களுக்கும் இது மிகப்பெரிய லாபம் கொடுத்த ஆண்டாக இருக்கும். பங்கு சந்தை ஏற்ற இறக்கம் இருந்த போதும் நவம்பர் வரை உயர்வு தொடர்ந்தது.
இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை தீவிரமாக பயன்படுத்துகிறது. இதன் மூலம் கடன் செலவை குறைக்க உதவுகிறது எனவும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுதிப்தா ராய் சிஎன்பிசி டிவி18க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். AI மூலம் கடன் ஆபத்தை மதிப்பீடு செய்து செலவுகளை குறைப்பதாக தெரிவித்தார், இது மறைமுகமாக நிறுவனத்தின் லாபத்தை உயர்த்தும்.
இதேவேளையில் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் தங்க கடன் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தங்க கடன் பாதுகாப்பானது, விரைவாக வழங்க முடியும், இதேபோல் கிராமப்புற, நகர்ப்புற வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்க முக்கிய பிரிவாக உள்ளது.

இதேபோல் இந்நிறுவனம் மைக்ரோஃபைனான்ஸ் துறையில் வேகமாக மீண்டு வருவதாக சுதிப்தா ராய் தெரிவித்தார். இந்நிறுவனத்தின் மொத்த கடன் புத்தகத்தில் மைக்ரோஃபைனான்ஸ் பிரிவு மட்டும் 26 சதவீத பங்கீட்டை வகிக்கிறது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவன பங்குகள் 0.32 சதவீதம் உயர்ந்து 300.80 ரூபாய் அளவில் முடிந்துள்ளது. 2026ஆம் ஆண்டிலும் இதேபோன்ற வளர்ச்சியை பதிவு செய்யுமா என்ற கேள்வியும் முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

பாகிஸ்தான்-க்கு மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி.. பாவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

நிஃப்டி காட்டும் பளபளப்பு நிஜமா? 80% பங்குகள் கரடியின் பிடியில் - முதலீட்டாளர்களே உஷார்!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!



Click it and Unblock the Notifications