இந்திய பங்குச் சந்தைகள் தற்போது தினமும் புதிய உச்சத்தை தொடும் அளவில் உள்ளது. பல நிறுவன பங்குகளின் விலையும் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் எந்த துறையை சேர்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும் என்று பலரும் மண்டையை போட்டு குழப்பி கொண்டு இருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டில் எந்த துறைகளை சேர்ந்த பங்குகள் ஏற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து முன்னணி நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். அல்கெமி மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரியான ஹிரேன் வேத் பேட்டி ஒன்றில் கூறியதாவது:

பங்குச் சந்தையில் அடுத்த 2 ஆண்டுகள் லார்ஜ் கேப் ஐ.டி., வங்கி மற்றும் நியூ ஏஜ் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பங்குகளின் காலமாக இருக்கலாம். கடந்த சில ஆண்டுகளாக லார்ஜ் கேப் வங்கிகள் மற்றும் ஐ.டி. பங்குகளின் செயல்திறன் குறைவாக இருந்தது.
பெரிய ஐ.டி. பங்குகளுக்கு செயற்கை நுண்ணறிவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம். நியூ ஏஜ் தொழில்நுட்ப துறையை நிறுவனங்கள் பல லாபத்தை அளிக்க தொடங்கும் என்பதால் அடுத்த ஆண்டில இந்த துறை பங்குகள் ஏற்றம் காணும்.
2024ம் ஆண்டின் மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் முதலீடு செய்வார்கள். அன்னிய முதலீடு வர ஆரம்பித்தவுடன் அவர்கள் வங்கி பங்குகளை வாங்க வேண்டும். ஏனெனில் இது சந்தையின் மிகவும் லிக்விட் பகுதியாகும். எனவே அடுத்த ஆண்டு முதல் அல்லது இரண்டாவது காலாண்டில் வங்கி பங்குகள் செயல்படுவதை நீங்கள் காணலாம்.
ஸ்மால் மற்றும் மிட் கேப்கள் பக்கவாட்டாகச் செல்லலாம் அல்லது அவை ஏற்கனவே நன்றாக ஏறிவிட்டதால் சரிவை சந்திக்கலாம். ஆனால் பெரிய கேப்கள் உயரவில்லை. எனவே நிப்டி நன்றாக செயல்படும் நேரமாகும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் மீண்டும் நன்றாக செயல்பட ஆரம்பிக்கலாம்.
இந்த காளை (ஏற்றம்) தொடர வேண்டும் என்றால் ஒரு கட்டத்தில் லார்ஜ் கேப் பங்குகள் உயர ஆரம்பிக்க வேண்டும். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்குள் நிப்டி 21,000-22,000ஐ தாண்டினால் நான் ஆச்சரியபட மாட்டேன். 2025 தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ்க்கு இடையில் சென்செக்ஸ் 1,00,000ஐ எட்டும் சாத்தியம் உள்ளது. அடுத்த நிதியாண்டில் ஐ.டி. மற்றும் வங்கி பங்குகள் முன்னணியில் இருக்கலாம் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications