நாட்டின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனம் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி). இந்நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளரும் கூட. எல்ஐசி நிறுவனத்துக்கு பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடு வாயிலாகவும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. எல்ஐசி நிறுவனம் ஒரு பங்கில் முதலீடு செய்வதற்கு முன் நல்ல ஆய்வு செய்து, நல்ல ஆதாயம் கிடைக்கும் என்று தெரிந்தால் மட்டுமே முதலீடு செய்யும்.
முதலீடு
எல்ஐசி ஒரு பங்கில் முதலீடு செய்கிறது என்றால், அந்த பங்கு நல்ல பங்காக இருக்கும் என்ற நம்பிக்கை சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால் எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்த பங்கு உடனே லைம் லைட்டுக்கு வந்து விடும். தற்போது எல்ஐசி நிறுவனம் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியாவில் தனது பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளது என்ற செய்தி பங்குச் சந்தை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக எல்ஐசி நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த மே 9ம் தேதி நிலவரப்படி, அரசுக்கு சொந்தமான பேங்க் ஆஃப் இந்தியாவில் நிறுவனத்தின் பங்கு மூலதனம் 8.38 சதவீதமாக உள்ளது. 2021 செப்டம்பர் 2ம் தேதி முதல் 2025 மே 9ம் தேதி வரையிலான காலத்தில் கூடுதலாக பேங்க் ஆஃப் இந்தியாவின் 2.06 சதவீத பங்குகளை வாங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
பங்கு விலை
கடந்த நான்கு ஆண்டு காலத்தில் பேங்க் ஆஃப் இந்தியாவில் எல்ஐசி பங்கு மூலதனம் 6.35 சதவீதத்திலிருந்து 8.38 சதவீதமாக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில், பேங்க் ஆஃப் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.27 சதவீதம் உயர்ந்து ரூ.112.55ல் நிலை கொண்டது.
2025 ஜனவரி 13ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.90.00க்கு சென்றது. ஆனால் அதன் பிறகு இப்ங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது இப்பங்கின் விலை அதன் 52 வார குறைந்தபட்ச விலையை காட்டிலும் 25 சதவீதம் அதிகமாக உள்ளது.
தொடர் சரிவு
மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில், எல்ஐசி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.42 சதவீதம் உயர்ந்து ரூ.826.75ஆக இருந்தது. 2024 ஆகஸ்ட் 1ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,221.50ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 3ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.715.35க்கு சென்றது.
ஸ்வீட் எடு கொண்டாடு.. ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க அதிக வாய்ப்பு.. எப்படி தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications