இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து சுமார் ரூ.50 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) கடந்த 2 மாதத்தில் விற்றுள்ளனர். இதனால் கடந்த 2 வருடமாக அதிகளவிலான லாபத்தைப் பெற்று வந்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தற்போது பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 158.60 புள்ளிகள் சரிந்து 77,421.71 புள்ளிகளை அடைந்துள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் சென்செக்ஸ் தனது வரலாற்று உச்ச அளவான 85,978.25 புள்ளிகளை அடைந்தது, கிட்டத்தட்ட 8000 புள்ளிகளை இழந்துள்ளது.

இதேவேளையில் இந்த பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை போக்கு குறையத் தொடங்கியுள்ளதால், இந்தியச் சந்தை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகச் சந்தை நிபுணர்கள் கூறுவது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.
நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் எஃப்ஐஐ முதலீட்டாளர்களின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. முதல் வாரத்தில் ரூ.20,000 கோடி வரையிலான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றப்பட்ட நிலையில், இரண்டாவது வாரத்தில் வெளியேற்றத்தின் அளவு ரூ.2,500 கோடியாகக் குறைந்துள்ளது. இது எஃப்ஐஐ முதலீட்டாளர்களின் முதலீட்டு முடிவில் நடந்த முக்கியமான மாற்றத்தை காட்டுகிறது.
முன்னணி முதலீட்டு நிறுவனமான சிஎல்எஸ்ஏ, அதன் முதலீட்டு ஒதுக்கீட்டுக் கொள்கையை அக்டோபர் மாதமே மாற்றியமைக்க உள்ளதாக அறிவித்தது. இந்த மாற்றத்தின் மூலம் சீனாவில் அதிகப்படியான முதலீடு செய்யவும், இந்தியாவில் 20% அதிக எடையுடனும் முதலீட்டுக் கொள்கையை மாற்றி அமைப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் நடப்பு நிதியாண்டின் முடிவிற்குள் அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு முதலீட்டுச் சந்தையில் நடக்கும் Santa Rally முதலீட்டின் போது இந்தியாவில் இருந்து முதலீட்டு வெளியேற்றம் குறையும் என நம்பப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு இறுதியில் எஃப்ஐஐ முதலீட்டாளர்களின் இந்தியப் பங்கு முதலீட்டின் விற்பனையைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்த்தாலும், டிரம்ப் நிர்வாகத்தின் ஆட்சிக்கு வருவதால் பல்வேறு கொள்கைகளில் மாற்றம் இருக்கும். இதனால் ஜனவரி மாதம் வரையில் பங்குச்சந்தையில் அதிகப்படியான தடுமாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்செக்ஸ் செப்டம்பர் 27 ஆம் தேதி உச்சத்தைத் தொட்டதிலிருந்து, எம்எஸ்சிஐ இந்தியா அமெரிக்க டாலர் அடிப்படையில் சுமார் 12% குறைந்துள்ளது, அதே நேரத்தில் நிஃப்டி சுமார் 10% குறைந்துள்ளது. எஃப்ஐஐ வெளியேற்றம் நின்றாலும், புதிய முதலீடுகள் இல்லாவிட்டாலும், உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு சந்தையை உயர்த்தலாம் என்றும் சந்தை நிலவரம் கூறுகிறது.
இதேவேளையில் முதலீட்டாளர்களை அதிகம் நெருடும் விஷயம் இந்திய நிறுவனங்களின் சமீபத்திய இரண்டாவது காலாண்டு வருவாய் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தது தான். ஆனால் கடந்த 2 மாதத்தில் 50 லட்சம் கோடி இழப்பால் நிறுவனங்களின் மதிப்பீடுகள் கணிசமாகக் குறைந்தாலும் இன்னும் அதிக மதிப்புடையதாகவே இருப்பதாகக் கவலைகள் எழுந்துள்ளன.
மேலும் மூன்றாவது காலாண்டில் ஓரளவு மீட்சியும், நான்காவது காலாண்டில் வலுவான செயல்திறனை இந்திய நிறுவனங்கள் வெளிப்படுத்தும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் டிசம்பர் காலாண்டு முடிவுகள் இந்திய பங்குச்சந்தையை மீண்டும் உயர்வுக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications