இந்திய வானிலை ஆய்வுத் துறை இந்த வருடம் பருவமழை முன்பு கணிக்கப்பட்ட 96 சதவீதமாக இல்லாமல் 100 சதவீதம் முழுமையாக அளவை எட்டும் என அறிவித்துள்ளது.
இதனால் இன்றைய வர்த்தகத்தில் விவசாய உரம் மற்றும் நுகர்வோர் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை அடைந்தது.
ஏர்டெல்
மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் ஜியோ தாக்கத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் 72 சதவீதம் வரை சரிந்த நிலையிலும் இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 7.96 சதவீதம் வரை அதிகரித்தது.
வரலாறு காணாத உயர்வு
இத்தகைய லாபகரமான சூழ்நிலையில், நிஃப்டி குறியீடு இன்று வரலாறு காணாத விதமாக 9,400 புள்ளிகளை அடைந்தது. மேலும் சென்செக்ஸ் குறீயடும் 1.05 சதவீத உயர்ந்து சர்வதேச சந்தையில் தனித்து நின்றது.
சென்செக்ஸ்
புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு தொடர் உயர்வுடன் 314.92 புள்ளிகள் அதாவது 1.05 சதவீதம் வரை உயர்ந்து அசத்தியது.
இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனர்.
நிஃப்டி
பல நாட்களாகத் தொடர்ந்து உயர்வில் இருக்கும் நிஃப்டி குறியீடு இன்று 90.45 புள்ளிகள் உயர்ந்து 9,407.30 புள்ளிகளை அடைந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
ரூபாய் விலை
இன்றைய நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் கணிசமாகச் சரிந்து 64.62 ரூபாயாகச் சரிந்தது.