சரிவில் இருந்து மீண்டு தொடர்ந்து 3 நாளாக உயர்வில் சென்செக்ஸ்..!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கண்டு முதலீட்டு சந்தையை விட்டு வெளியேறிய பன்னாட்டு முதலீட்டாளர்கள், கடந்த 3 நாட்களாக கணிசமான முதலீடு செய்து வரும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகளை வரை உயர்ந்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. மேலும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கும் இது சிறந்த முதலீட்டு வாய்ப்பாக தெரிந்தது.

 சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சாதகமான சூழ்நிலையில் துவங்கிய நிலையில், இன்றைய வர்த்தக முடிவில் 213.66 புள்ளிகள் உயர்ந்து 31,497.38 புள்ளிகளை அடைந்தது.

 நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே உயர்ந்துவுடன் துவங்கி நிஃப்டி. வர்த்தக துவக்கத்தில் 9,890 புள்ளிகள் வரை அடைந்தது.

சில நிமிடங்களில் இது 9,850 புள்ளிகளுக்கு குறைவான அளவீட்டை அடைந்து தொடர்ந்து நிலையான வர்த்தகத்தை பதிவு செய்தது. இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 70.90 புள்ளிகள் உயர்ந்து 9,859.50 புள்ளிகளை அடைந்தது.

 

 முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி குறியீடு சந்தையில் கெயில், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை சந்தித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+