கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC உற்பத்தியைக் குறைக்க முடியாது என அறிவித்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 45 டாலர் என்ற நிலையில் மட்டுமே இருக்கும். இதனால் இப்பிரிவில் முதலீடும் அதிகமாக இருக்காது.
எனவே சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் அனைவரும் அமெரிக்கச் சந்தையை மட்டும் நம்பி இருக்கும் நிலை தற்போது நிலவி வருகிறது.
அமெரிக்கச் சந்தையின் வளர்ச்சி காரணிகள் அடுத்தச் சில மாதங்களுக்குச் சிறப்பாக உள்ள நிலையில், முதலீட்டாளர்களுக்குச் சிறந்த வாய்ப்பாக உள்ளது. மேலும் இந்திய சந்தையின் ஜூலை-செப்டம்பர் மாத்திற்கான ஜிடிபி அளவுகள் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிட உள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடுகள் குவிந்தது.
இதன் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு இன்று முழுவதும் ஏறுமுகமாகவே இருந்தது.
புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 258.80 புள்ளிகள் உயர்ந்து 26,652.81 புள்ளிகளை எட்டியும், நிஃப்டி குறியீடு 82.35 புள்ளிகள் உயர்ந்து 8,224.50 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தலா 1 சதவீதம் உயர்ந்து 2 வார உச்சத்தை அடைந்துள்ளது.