பாராளுமன்ற சபாநாயகர் புதன்கிழமை கூட்டத்தில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்திற்கு அனுமதி அளித்துள்ளதால் இந்திய பங்கு சந்தைச் சரிவுடன் முடிந்தது.
அதே நேரம் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் சரிவு என்பது பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
இன்றைய நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான ச்ன்செக்ஸ் 146.52 புள்ளிகள் என 0.40 சதவீதம் சரிந்து 36,373.44 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 27.60 புள்ளிகள் என 0.25 சதவீதம் சரிந்து 10,980.45 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் எண்ணெய் மற்றும் எரிவாய் பங்குகளைத் தவிரப் பிற துறைகள் எல்லாம் சர்ந்து காணப்பட்டன. மெட்டல், ரியாலிட்டி, அடிப்படை பொருட்கள், டெலிகாம், தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல் பங்குகள் என அனைத்தும் சரிந்து காணப்பட்டன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், யெஸ் வங்கி, எச்டிஎப்சி, ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்கள் லாபம் அளித்து இருந்தன
நட்டம் அளித்த பங்குகள்
டாடா ஸ்டீல், வேதாந்தா, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், டாடா மோட்டார்ஸ், மஹீந்தரா & மஹீந்தரா பங்குகள் நட்டத்தினை அளித்து இருந்தன.