நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் என்பது தற்போது குறையத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு சர்வதேச காரணிகள் பலவற்றிற்கும் மத்தியில் சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
அமெரிக்காவின் வட்டி விகிதம் குறித்தான அறிவிப்புக்கு பிறகு சந்தை சரிவினை கண்டது. இந்த நிலையில் ஆசிய சந்தைகளும் பலமான சரிவில் காணப்பட்டன. எனினும் இன்று 4 வார குறைந்தபட்ச நிலையில் இருந்து ஏற்றம் கண்டுள்ளது.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 263.22 புள்ளிகள் அதிகரித்து, 52,837.68 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 59.80 புள்ளிகள் அதிகரித்து,15,806.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 235.07 புள்ளிகள் அதிகரித்து, 52,809.53 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 76 புள்ளிகள் குறைந்து, 15,822.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், மாருதி சுசூகி, யுபிஎல், ஒ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே விப்ரோ, ஹெச்.டி.எஃப்.சி லைஃப், நெஸ்டில், பிரிட்டானியா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசூகி, லார்சன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தைக்கு சாதகமான காரணிகள்
இந்திய சந்தைகள் அவ்வப்போது சரிவினை கண்டாலும், அது மீண்டும் ஏற்றம் காணலாம். ஆக சந்தை சரியும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதன் அறிகுறியாகத் தான் இன்று சென்செக்ஸ் புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. இது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தடுப்பூசிகளும் மிகப்பெரிய அளவில் போடப்பட்டு வருகின்றன. இது பொருளாதாரம் விரைவில் மீண்டு வர வழிவகுக்கும். இதுவும் சந்தைக்கு சாதகமாக இருக்கலாம் என பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 398.59 புள்ளிகள் அதிகரித்து, 52,973.05 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 119.55 புள்ளிகள் அதிகரித்து, 15,866.05 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.